10.8.17

பருத்தி (Gossypium hirsutum L) பருத்திப்பால்

 பருத்தி



இலை,காய்





இந்தியா இலங்கை நாடுகளில் பெருமளவு ஆடைக்காக பயிரிடப்படுகிறது. இதில் வெண்பருத்தி ஆடை, நெய்வதற்கு பயன்படுகிறது. அதன் பஞ்சு கொண்டு தயாரிக்கப்படும் மெத்தையில் படுத்து தூங்கினால் ஆயுள் அதிகரிக்கும். இதன் இலை பூ பஞ்சு, பட்டை, வேர், வேர்பட்டை மருத்துவ குணங்கள் உடையது. ஐந்தாய்ப்பிரிந்த இலைகள் பச்சை சிறத்தில் அமைந்திருக்கும். 

மலர்கள் மஞ்சள் நிறத்துடனும் அமைந்திருக்கும். இதில் செம்பருத்தி, கொங்கிலவும் மருத்துவத்தில் பெருமளவு பயன்படுகிறது.. சிவப்பு நிற மலர்கள் உடையது செம்பருத்தியாகும். ஆனால் பஞ்சு வெண்மையாகவே இருக்கும் நோய்களில் தீர்க்க முடியாத நோய்கள் என்பது கற்பனை நோய்தான். அது என்ன கற்பனை நோய்? சிலருக்கு கை வலிப்பதாக கூறி கொண்டே இருப்பார்கள். எந்த மருந்து கொடுத்தாலும் இது தீராது. 

இது மனஅழுத்தம் ஏற்பட்டு அதனால் நரம்பு மண்டலம் பாதிப்படைந்து உண்டாகும் நோயாகும்.  இதற்கு பருத்தி வேரின் பட்டையை அரைலிட்டர் தண்ணீரில் போட்டு பாதியளவு சுண்டும் வரை காய்ச்சி வடிக்கட்டி 30மிலி அளவில் அரை மணிக்கு ஒரு முறை குடித்து வந்தால் நரம்பு கோளாறுகள் அதனால் ஏற்படும் கற்பனை நோய்கள் நீங்கும். இது செரிமாணத்தை தூண்டும். 

இலைக்கொழுந்தை நிழலில் காயவைத்து குடிநீரிட்டு கழிச்சல்களுக்கு கொடுத்தால் கழிச்சல் நிற்கும். உடல் தேறும்.  30கிராம் இலை அல்லது மொக்கை எடுத்து மசிய அரைத்து 80மிலி பசும்பாலில் கலந்து காலையில் ஒரு வேளை மட்டும் குடித்து வந்தால் பெண்களின் வெள்ளை போகுதல் முதலிய சிறுநீரக கோளாறுகள் நீங்கும். தீராத வயிற்று கடுப்பு ஏற்பட்டால் இலைச்சாறு 30மிலி எடுத்து 150 பசும்பாலில் கலந்து காலை மாலை குடித்து வந்தால் மூலம் வயிற்று கடுப்பு நீங்கும். 

36 கிராம் இச்சாற்றை பசும்பாலில் கலந்து  குடித்தால் சீதக்கழிச்சல் நீங்கும். இலையை அரைத்து பற்று போட்டால் கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும். தேள் கொட்டியவர்கள் அதன் கடுப்பு தாங்க முடியாமல் துன்பப்படுவார்கள். இவர்களுக்கு இலையுடன் அதே அளவு கடுகு சேர்த்து அரைத்து பற்று போட தேள்கடி கடுப்பு குறைந்து நலம் பெறுவீர்கள்.

பூ அல்லது பருத்தி விதைகளை அரைத்து பற்றுபோட தீக்காயங்கள் ஆறும். பஞ்சை கருக்கிப்பொடித்து புரையோடிய புண்களுக்கு தடவ விரைந்து ஆறும். விதைகளை தோள் நீக்கி பொடித்து ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை 200மிலி பசும்பாலில் கலந்து குடித்து வர நரம்பு மண்டலம் வலுப்பெறும்.

100கிராம் விதையை சிதைத்து எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 500மில்லியாக காய்ச்சி வடித்து மூன்று வேளை குடித்து வர வயிற்றுகடுப்பு, முறைக்காய்ச்சல் நீங்கும். பருத்தி  விதையின் மூலம் எடுக்கப்பட்ட பருத்தி விதை எண்ணெயை தடவினால் அரிப்பு, தோலில் தோன்றும் புள்ளிகள் அக்கிபுண், சொறி நீங்கும். பூவை தண்ணீர் விட்டு அதனுடன் அளவாக சர்க்கரை சேர்த்து பாகு பதமாக காய்ச்சி பாட்டிலில் வைத்துக்கொண்டு நாள்தோறும் காலை, மாலை 30மிலி குடித்து வந்தால் நரம்பியல் நோய்கள், கற்பளை நோய்கள் அனைத்தும் நீங்கும். 

மேலும் சிறுநீர் நோய்கள் தணியும் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். இரண்டு பருத்தி மொக்கை பசும்பால் விட்டு அரைத்து விழுங்கினால் மேகநோய்கள் நீங்கும். இரத்த பித்த நோயும் நீங்கி நலம் உண்டாகும். 

பருத்திப்பால்



தேவையானவை

பருத்தி விதை - 2 கைபிடி
கருப்பட்டி - 100 கிராம்
தேங்காய் பால் - அரை மூடி
சுக்கு - அரைவிரளளவு
அரிசி மாவு - 2 ஸ்பூன்
ஏலக்காய் - 2

செய்முறை

பருத்தி விதையை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் ஊறிய விதையை மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பால் எடுக்க வேண்டும்.
கருப்பட்டியை தூளாக்கி ஒரு கப் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி கொள்ளவேண்டும் .ஓரு பாத்திரத்தில் பருத்திவிதை பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும் .
ஒரு கொதி வந்த உடன் கருப்பட்டி கரைசல், தேங்காய் பாலையும் ஊற்றி காய்ச்ச வேண்டும்.
இந்த கலவை கொதிக்கும் போது அரிசி மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து அக் கலவையை கொதிக்கும் பருத்தி பாலில் சேர்த்து கரண்டியால் தொடர்ந்து இரண்டு நிமிடம் கிளறி பாத்திரத்தை இறக்கி விடவேண்டும்.
சுக்கை சிறிது வறுத்து பொடியாக்கி ,ஏலக்காயை பொடியாக்கி இறுதியில் சேர்க்க வேண்டும்.பருத்திப்பால் ரெடி


செய்முறை 2
பருத்திப்பால் 
தேவையான பொருட்கள்: பச்சரிசி – 100 கிராம் , பருத்தி விதை – 50 கிராம் தேங்காய் பெரிய மூடி – 1 முந்திரி – சிறிதளவு சுக்கு – சிறிதளவு ஏலக்காய் – 3 கருப்பட்டி – வட்டு (பெரியது)


 செய்முறை
பருத்திவிதையை தண்ணீரில் 6 மணிநேரம் ஊற வைக்கவேண்டும். பச்சரிசியை மிக்ஸியில் ரவை பதத்திற்கு பொடித்துக்கொள்ளவும். ஊறிய பருத்தி விதையை தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து பால் எடுக்கவும். கருப்பட்டியை நன்றாக பொடித்து அதில் தண்ணீர் விட்டு கரையும் வரை காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். தேங்காய் முழுவதையும் துருவி, அதில் முக்கால் பங்கு எடுத்து தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் 6 டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் பொடித்து வைத்துள்ள அரிசியை போட்டு சிறிதுநேரம் வேகவிட வேண்டும். கொதி வந்தவுடன் தீயை குறைத்துக்கொண்டு, பருத்திப்பாலை ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும். பருத்திப்பால் பச்சை வாசனை போனவுடன் கருப்பட்டி பாகை சேர்க்கவும். பின்னர் சுக்கு, ஏலக்காய், மீதமுள்ள தேங்காய் துருவல், வறுத்த முந்திரி ஆகியவற்றை சேர்த்து கிளறவும். தேங்காய் பாலை கடைசியாக ஊற்றவேண்டும். அதன் பிறகு கொதிக்கவிட வேண்டாம்.
பருத்திப்பால் ரெடி

பருத்திஎண்ணெய்