31.12.15

முல்லை/முல்லை இலைச் சொதி

முல்லை










உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் முல்லை இலை சொதி
தேவையானவை
தேங்காய்ப்பால்/   2 கப்
பச்சை மிளகாய்/   7
சின்னவெங்காயம்/  6
முல்லை இலைகள்/ 20
தேசிக்காய் புளி /  1ரீஸ்  ஸ்பூன்
உப்பு /   தேவையான அளவு
தண்ணீர்/    சிறிதளவு
செய்முறை
பாத்திரத்தில் இலைகளை கழுவி வெட்டி போடவும் பச்சை மிளகாய்,வெங்காயத்தை கழுவி வெட்டி போடவும் தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு அவியவிடவும்  .அவிந்தவுடன் தேங்காய்ப் பாலை விடவும் தேசிக்காய் புளி விட்டு கலக்கவும் .மீண்டும் ஒரு கொதி கொதித்தவுடன் இறக்கவும். 

23.12.15

தொய்யில் கீரை

தொய்யில் கீரை



அயன் சத்துக்கொண்டது.மலச்சிக்கலைத் தடுப்பதுடன் குடலில் புற்றுநோய்

எற்படாமலும் தடுக்கின்றன அத்துடன் இரத்தத்தில் கொலாஸ்ரோல் அதிகரிப்பதையும் 
கட்டுப்படுத்துகின்றன. அத்துடன் உடற்பருமன் அதிகரிப்பதையும் இவை 

கட்டுப்படுத்துகின்றன

9.12.15

வண்டுகொல்லி Senna alata (சீமையகத்தி) மருத்துவகுணங்கள்



வண்டுகொல்லி (சீமையகத்தி)
http://settikathir.blogspot.com/

வண்டுகொல்லி (சீமையகத்தி)

வண்டுகொல்லி (சீமையகத்தி)

வண்டுகொல்லி (சீமையகத்தி)

வண்டுகொல்லி (சீமையகத்தி)


சீமையகத்தி முழுத்தாவரமும் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. படர்தாமரை,தேமல்,முகப்பரு,சிரங்கு போன்ற தோல் நோய்களை குணமாக்கும். 
இதன் இலையை அரைத்து தோல் நோய்களிற்கு பூசி வர  குணமாக்கும். 
 சீமையகத்தி 2 மீ. வரை உயரமான பெருஞ்செடி வகையைச் சார்ந்தது. இலைகள் கூட்டிலையானவை, நீள்வட்டமான அல்லது முட்டை வடிவானவை.
பூக்கள் நுனியில் கொத்தாக அமைந்தவை, பெரியவை, பொன்மஞ்சள், செம்மஞ்சள் நிறமானவை.
காய்கள், பச்சையானவை, முதிர்ந்த கனிகள், கறுப்பானவை. நீளவாக்கில் வெடிப்பவை. விதைகள் எண்ணற்றவை.
மேலும் இதன் மருத்துவ உபயோகங்களுக்காக, தோட்டங்களில் பெரும்பாலும் வளர்க்கப்படுகின்றன. இதன் இலை, பூ, வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

படர் தாமரை குணமாக சீமையகத்தி வேரை, எலுமிச்சம்பழச் சாறுவிட்டு அரைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.

8.12.15

பொடுகைப் போக்க சில வழிமுறைகள் - அறிந்து கொள்வோம்

பொடுகைப் போக்க சில வழிமுறைகள் - அறிந்து கொள்வோம்


E-mailPrintPDF
மண்டை ஓட்டை போர்த்தியிருக்கும் தோலில் பொதுவாக புதிய தோற்கலங்கள் உற்பத்தியாக தோலின் வெளிப்படையாக அமைந்த இறந்த கலங்கள் தள்ளப்பட்டு அப்புறப்படுத்தப்படும். தோற்கலங்கள் புதுப்பித்தல் பல மடங்கு வேகத்தில் நடைபெறுமாயினின் அதிகளவு இறந்த கலங்கள் வெளித்தள்ளப்படும்.
இதுவே தலை சீவும் பொழுது ஆடைகளில் கொட்டிக்கிடக்கும். சில சமயங்களில் சொறியவும் நேரிடும்.  சில சமயங்களில் தலை மயிரில் மா தூவி விட்டது போன்று படிந்துமிருக்கும். எக்சிமா என்பது சொடுகு நோயின் தீவிரமடைந்த நிலையாகும். இது கண்புருவமி மூக்குஇ காது நெற்றி போன்ற இடங்களிலும் தோன்றக்கூடும்.  தோல் வியாதியும் சொடுகு போன்றே தலைத் தோலைப் பாதிக்கின்றது. இதன் பொழுது சிவப்பாகி சிறிது வீக்கமடைந்து வெள்ளி கலந்த வெள்ளைத் தகடுகள் போன்றிருக்கும். இது காது, முழங்கால் மூட்டு, முழங்கை போன்ற இடங்களிலும் தோன்றும்.
பெண்களைவிட ஆண்களையே இது அதிகம் பாதிக்கிறது. தலைத் தோலில் சிராய்வுகள் ஏற்படுத்தக் கூடிய  (கூரான, கடினமான சீப்பினால்ம்ம் ) சீப்பினால் சீவுதலாலும்,  நகத்தினால் சொறிவதனாலும்,  நுண்ணங்கிகளின் தாக்குதலினாலும் ஏற்படுவதாக  கருதப்படுகிறது.
பொடுகு ஏன் வருகிறது?
*   வரட்சியான சருமத்தினால் வரும்
*   அவசரமாக முழுகும்போது (தலைக்கு குளிப்பது) தலையை நன்றாக துடைப்பது கிடையாது. இதனால் தண்ணீர், சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் பொடுகு உற்பத்தியாகும்.
*   எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது
*   ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணி தலையில் தங்க நேரிடும். இதனாலும் பொடுகு வரும்
*   “பிடி ரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு வரலாம்.
*   எக்ஸீமா(Eczema), சொறாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நொய்களாளும் பொடுகு வரலாம்
*   அதிகமாக சாம்பு பயன்படுத்தினாலும் பொடுகு வரலாம். கண்ட கண்ட (இரசாயன கலவைகளை)  செல்களை தலையில் தேய்ப்பதனாலும் இது வரலாம்.
*   மனஅழுத்தம், கவலையாலும் இது வரலாம்
பொடுகு வருவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
*   ஒருவர் பயன்படுத்திய சீப்பு தலையணை துண்டு போண்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது
*   தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்ததிருக்க வேண்டும்
*   கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்
பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?
*   தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்புவை பயனபடுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.
*   சாலிசிலிக் அமிலம் சல்பர் கலந்த சாம்புகளை பயன்படுத்தலாம்.“பிடிரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்னுயிர் கிருமியால் ஏற்படும் பொடுகு தொல்லைக்கு டாக்டரை பார்கவும்.
*   சின்ன வெங்காயம் கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்த பின்னர் 15நிமிஷம் கழித்து முழுகலாம்
பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து முழுகலாம்.
*   தலையில் தயிர் தேய்த்து முழுகலாம்
*   வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து முழுகலாம்.
*   பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து முழுகுவது பொடுகுக்கு மிகவும் நல்லது
*   வெந்தய பவுடரை தலையில் தேய்த்து முழுகினால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.
*   அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்
*   வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்
*   வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்
*   முழுகியபின்பு தலையை துடைக்காது கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு பிரட்டி திரும்பவும் முழுகியபின் துடைக்கலாம்.
*   அரைத்த மருதாணி இலையையுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து தைலையில் பூசலாம்.
*   வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊறவிட்டு பின்பு முழுகலாம்.
*   தேங்காய் எண்ணையுடன் வேப்பெண்ணையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.
*   நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.
*   நீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துவாயை நனைத்து தலையில் கட்டி விடுங்கள். பிறகு நன்கு அலசி விடவும்.
*   தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.
*   பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறியபின் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.
*   ஆலிவ் எண்ணெயுடன் இஞ்சிச்சாறு சேர்த்து நன்றாக கலந்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து ஊற வைத்து பிறகு முழுகி வந்தால் பொடுகு குறையும்.

4.11.15

ஓரிதழ்தாமரை hybanthus enneaspermus மருத்துவகுணங்கள்

ஓரிதழ்தாமரை

ஓரிதழ்தாமரை
ஓரிதழ்தாமரை
ஓரிதழ்தாமரை
ஓரிதழ்தாமரை
ஓரிதழ்தாமரை வேர்


தாமரை என்றவுடன் நீரில் இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். இது நிலத்தில் வளரும் சிறு செடி வகையாகும். இதன் இலையை வாயில் வைத்து சுவைத்தால் வாயில் குழகுழப்பு தட்டும்.

   இதன் இலை, தண்டு, பூ, வேர், காய் அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டது. இதற்கு இரத்தின புருஷ்என்ற பெயரும் உண்டு.
 
உடல் வலுப்பெற
ஓரிதழ் தாமரையை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து   பாலில்கலந்து காலை, மாலை என இருவேளையும் அருந்திவந்தால் உடல் வலுப்பெறும்ஆண்மை பெருகும். நோயின்தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களுக்கு உடல் தேற ஒரிதழ்  தாமரை        நல்ல மருந்தாகும்.

விஷக்காய்ச்சலால் அவதியுறுபவர்கள் ஓரிதழ் தாமரையை கசாயம் செய்து அருந்தி வந்தால், விஷக்காய்ச்சல் நீங்கும். இரைப்பு நோய்க்கு இது அருமருந்தாகும். உடல் எடை குறைய ஓரிதழ் தாமரை கசாயம் சிறந்தது.

ஓரிதழ் தாமரை இலை, பச்சை கற்பூரம், கோரோசனை இவற்றை சம அளவு எடுத்து இடித்து பசுவின் நெய்யுடன் கலந்து மேகவெட்டை தாக்கிய பகுதிகளில் பூசி வந்தால் மேகவெட்டை தீரும்.

ஓரிதழ் தாமரையின்வேரை  600ml நீரில் 200ml வரும் வரை காய்ச்சி கசாயம் செய்து அருந்திவந்தால் உடல் வலுபெறும்.

22.10.15

குடம்புளி(கொருகாப்புளி) பயன்கள்,புளி வகைகள்

                     குடம்புளி(கொருகாப்புளி)மரம்
குடம்புளி(கொருகாப்புளி)காய்
காய்ந்ததுகுடம்புளி(கொருகாப்புளி)

காய்ந்ததுகுடம்புளி(கொருகாப்புளி)

இது மருத்துவப்புளி எனவும் அழைக்கப்படுகிறது. இதை பழப்புளிக்குப்பதிலாக 
கறிகளில் பயன்படுத்துவார்கள் இந்தபுளியை கறிகளில் போட்டபின்னர் சிறிது
 நேரம் கழித்து எடுத்துவிடவேண்டும் ஏனென்றால் இது நேரம்செல்லசெல்ல புளிப்புதன்மையை கூட்டிக்கொண்டுருக்கும்.இதன் காயில் பலவகையான உடல் மெலிவு மருந்துகள் தயாரிக்கப்படுகிறது.உ+ம்




 இந்தபுளியை அன்றாடம் கறிகளில் பயன்படுத்திவந்தால் ஆரோக்கியமான மெலிவான உடலை பெறமுடியும்.

பழப்புளியைவிடசிறந்தது குடம்புளி(கொருகாப்புளி)

வெட்டுக்காயத்தை போக்க
தேவையான அளவு கொருகாப்புளி இலையை அரைத்து வெட்டுகாயத்தில் கட்ட வெட்டுக்காயம் குணமடையும்.

உடல்மெலிவதற்கு
கறிவேப்பிலை,கொருகாப்புளி,கறிமுருங்கையிலை,கருஞ்சீரகம்,உள்ளி இவையை சமஅளவு எடுத்து உலர்த்தி இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு காலை மாலை 1 தே.க அளவு எடுத்து வெந்நீருடன் பருகிவர உடல் எடைகுறையும்.

புளி வகைகள்
பழப்புளி,குடம்புளி(கொருகாப்புளி),கொடுக்காப்புளி,பட்டுப்புளி
பழப்புளி
பழப்புளி மரம்
பழப்புளி

கொடுக்காப்புளி
கொடுக்காப்புளி மரம்
கொடுக்காப்புளி

கொடுக்காப்புளி



பட்டுப்புளி
பட்டுப்புளி மரம்



பட்டுப்புளி

பட்டுப்புளி
பட்டுப்புளி

13.10.15

14 நாட்களில் உடல் எடையை குறைக்கும் (பப்பாளி)பப்பாசிகாய்

14 நாட்களில் உடல் எடையை குறைக்கும் பப்பாசிகாய்

பப்பாசிகாய் கறி
பப்பாசிகாயில் வினாகிரி(வினிகர்) அதிகளவு உள்ளது. வினிகர் உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் வல்லமை கொண்டது. 14நாட்கள் தினமும் ஒரு தடவை பப்பாசிகாய் கறி உணவில் சேர்த்து வந்தால் உங்கள் உடல் இடைகுறைவதை கண்கூடாகக் காணலாம். பப்பாசி(பப்பாளி)காய் கறி 
பப்பாசி(பப்பாளி)காய் 




பப்பாசி(பப்பாளி)காய் கறி

5.10.15

நீரழிவு நோயும் அதன் இரண்டாம் வகை நோய்க்கு மருந்தாகும் இயற்கை மூலிகைகளும்

நீரழிவு நோயும் அதன் இரண்டாம் வகை நோய்க்கு மருந்தாகும் இயற்கை மூலிகைகளும்


நீரிழிவு (diabetes) என்பது வளர்சிதைமாற்ற நோய்களின் ஒரு தொகுப்பாகும்.

தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையில், இந்நோய் உள்ளவர்களின் இரத்தத்தில் அதிக அளவு குளுக்கோஸ் எனும்சர்க்கரை இருக்கும்.


ஆனால், நீரிழிவு என்பது ஒரு நோயல்ல; இன்சுலின் சமசீர் நிலையை இழப்பதால் ஏற்படுவதாகும். மனித உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமாக உள்ளது.

குறிப்பாக, இரத்தத்தில்  குளுக்கோஸ் எனும் சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் அடைபடுதல், இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோய் மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது. 

இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பது அடிக்கடி சிறுநீர் கழித்தல் (polyuria), அதிகமாக தாகமெடுத்தல் (polydipsia),அளப்பரிய பசி (polyphagia) ஆகிய மரபார்ந்த அறிகுறிகளை உருவாக்குகின்றது.
நீரிழிவு நோய் குறித்து பலநூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக அறியப்பட்டிருந்தாலும் கூட, இதற்கான உறுதியான சிகிச்சை முறை என்பது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் தான் கண்டறியப்பட்டது.
1921ஆம் ஆண்டில் பேண்டிங்க் அண்ட் பெஸ்ட் என்ற கனேடிய விஞ்ஞானிகள் கூட்டணி இன்சுலின் மூலம் நீரிழிவு நோயை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்தனர். அதுவரை, ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்தால் மரணம் நிச்சயம் என்கிற நிலைதான் நீடித்தது.
இன்சுலினை கண்டுபிடித்த ‘பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்” என்ற விஞ்ஞானிகள் கூட்டணியின் தலைவர் பிரெடெங்க் பேண்டிங்கின்” பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் திகதியை, ஆண்டுதோறும் உலக நீரிழிவு நோய் தினமாக அனுஸ்டிக்கப்படுகிறது. முதன் முதலில் இது 1991 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படத் தொடங்கியது, தற்போது உலக அளவில் 192 நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது.

நீரழிவு நோயின் அனைத்து வகைகளும் 1921-ஆம் ஆண்டு இன்சுலின் உபயோகத்திற்கு வந்ததிலிருந்து சிகிச்சை அளிக்கக் கூடியவையாகவே உள்ளன.


இரண்டாம் வகை நீரழிவு நோயினை மருந்துகளின் மூலம் கட்டுபடுத்த முடியும். இருந்தபோதிலும் முதலாம், இரண்டாம் வகை நீரழிவு நோய்கள் இரண்டுமே நாள்பட்ட நோய்களாததால், இவற்றைச் சாதாரணமாக முற்றிலுமாகக் குணமாக்க முடியாது.

கணைய மாற்ற சிகிச்சை முதலாம் வகையில் முயற்சிக்கப்பட்டது. ஆனால், பெரும் வெற்றியைச் சாதிக்க முடியவில்லை. பல நோயுறுவான பருமனைக் கொண்டவர்களிலும், இரண்டாம் வகை நீரிழிவுக்காரர்களிலும் இரையக மாற்று வழி இணைப்பறுவை செய்வது வெற்றியைக் கொடுத்துள்ளது. கர்ப்பகால நீரிழிவானது பெரும்பாலும் குழந்தை பிறந்த பின் மறைந்துவிடுகிறது.

நீரிழிவு நோய் மூன்று வகைகளாக வகைப்படுத்தப் பெற்றுள்ளன:


முதலாவதுவகை

முதலாவதுவகை நீரிழிவானது (Type I Diabetes-IDDM- Insulin Dependent Diabetes Mellitus) குழந்தைகள், சிறுவர், சிறுமிகள், இளம் பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகின்றது.
இவர்களுக்கு இன்சுலின் கொண்டுதான் சிகிச்சை அளிக்கவேண்டும். ஏனென்றால் இவர்களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கின்றன. 10% வீதமான நீரிழிவு நோயாளிகள் வகை ஒன்றினால் பாதிக்கப்பட்டவர்களாவார்கள்.

இரண்டாவது வகை

இரண்டாவது வகை நீரிழிவு (Type II- NIDDM- Non Insulin Dependent Diabetes Mellitus) இன்சுலின் சுரப்பிகள் போதியளவு இன்சுலின் சுரக்காதாலோ அல்லது அப்படி சுரக்கப்படும் இன்சுலினுக்கு எதிர்வினை ஏற்படுவதாலோ ஏற்படுகின்றது. இந்த வகை நீரிழிவு கிட்டத்தட்ட 90 வீதமான நோயாளிகளில் காணப்படுகிறது.
இந்தவகை நீரழிவை வயது வந்தவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு என்றும் கூறுவார்கள். இந்த வகை அதிக உடற்பருமன் உள்ளவர்களிடம் காணப்படுகின்றது. இந்த வகை நீரழிவை நிறைகுறைப்பதாலும், சாப்பாட்டுக் கட்டுப்பாட்டாலும் மற்றும் உடற்பயிற்சியினாலும் சிலசமயம் கட்டுப்படுத்தலாம்.

மூன்றாவது வகை

கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி குருதியில் கலக்கிறது.
மூன்றாவது வகையான கர்ப்பகால நீரிழிவானது 2 சதவீதம் முதல 4 சதவீதமான பெண்களுக்கு கர்ப்பகாலத்தின் போது ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் இது மறைந்து விடுகிறது.
இருந்தபோதிலும், பிற்பாடு வாழ்க்கையில் குழந்தைக்கும் தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடும். நமது இரைப்பையும் குடலும் உணவிலிருந்து குளுக்கோஸ் எனும் வெல்லத்தை எடுத்து குருதியில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி குருதியில் கலக்கிறது.


நீரிழிவின் பெரும்பாலான முக்கிய அறிகுறிகளின் 

பல காரணங்களால் இது நிகழலாம்.
•    தேவையான அளவு இன்சுலின் கணையத்திலிருந்து உற்பத்தியாகாமல் போகலாம்.
•    இன்சுலின் தேவையான அளவு இருந்தும் சரியாக செயல்படாமல் இருத்தல் போன்ற காரணங்களால் ஏற்படலாம்.

நோய் யாருக்கு ஏற்படும்?
யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், பரம்பரையில் நீரிழிவு நோய் இருப்பவர்கள், எடை அதிகமாக இருப்பவர்கள், ஆகியவர்களுக்கு நீரிழிவு நோய் வர அதிக வாய்ப்புண்டு. இவர்கள், தங்களுடைய மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.


நீரிழிவு நோயின் அறிகுறிகள்
பல சமயங்களில் அறிகுறிகள் சரியாக தென்படாமல் போகிறது. சில பொதுவான அறிகுறிகள்
•    அடிக்கடி சிறுநீர் கழிப்பது
•    அடிக்கடி தாகம்
•    அதிக பசி
•    மிக வேகமாக எடை குறைதல்
•    அதிகமாக சோர்வடைவது
•    கண்பார்வை மங்குதல்
•    வெட்டு காயம் / சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல்
•    திரும்ப திரும்ப சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய்
•    பாதங்களில் உணர்ச்சி குறைவு அல்லது எரிச்சல்
நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள்
இரண்டாம் வகை நீரிழிவு நோயால் ஏற்படக்கூடியவை.
•    பார்வை இழப்பு
•    மாரடைப்பு
•    சிறுநீரகக் கோளாறு
•    பக்கவாதம்
•    கால்களை இழத்தல்
•    கோமா மற்றும் இறப்பு


வகை - 2 நீரிழிவை குணப்படுத்தும் இயற்கை மூலிகைகள்
துன்பங்கள் வந்தபின் காப்பதைவிட வருமுன் காப்பதே மேல் என்பதற்கேற்ப நோய் வருமுன் காக்க கண்டு பிடிக்கப்பட்ட முறைதான் கற்ப முறை. 
கற்ப முறையில் எண்ணற்ற மூலிகைகள் உள்ளன. எந்த நோய்க்கு எவ்வாறு மூலிகைகளை சாப்பிடவேண்டும் என்றும், நோய் வராமல் இருப்பதற்கு எந்தெந்த மூலிகைகளை சாப்பிடவேண்டும் என்றும் சித்தர்கள் அன்றே கூறியுள்ளனர். 
இந்தியாவிகும், இலங்கையிலும் பெரும்பாலான மக்களை வாட்டி வதைக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்ளுவது அவசியமாகின்றது.

நாவல்பழக் கொட்டை 
நாவல் பழம் என்பது நம் கண்ணுக்கு எதிரே கிடைக்கக் கூடிய ஒரு பழம். இந்த நாவல் பழக் கொட்டைகளை காயவைத்து நன்கு இடித்து பொடி செய்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

வேப்பம்பூ பொடி

வேப்பம் பூ, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவற்கொட்டை பொடி ஆகியவற்றை சேர்த்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும். 
வேப்பம்பூ வடகம்

வெந்தையக் கீரை 
வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை நன்றாக மசித்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு குறையும். வெந்தையக்கீரை சாப்பிடுவதன் மூலம் வகை 1 வகை 2 நீரிழிவு நோய் கட்டுப்படும் உடலில் அதிக கொழுப்புச் சத்து தங்குவதை தடுக்கிறது


அவரைக்காய் பொரியல் 
பிஞ்சு அவரைக்காயை நறுக்கி பொரியல் செய்து தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.

பாதம் பருப்பு 
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் வகை 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


வெள்ளைப்பூடு
பூண்டு என்றதுமே பலருக்கும் நினைவுக்கு வருவது, இதயம் காக்கும், கொழுப்பைக் கரைக்கும் சிறந்த உணவுப் பொருள் என்பதுதான். பூண்டுக்கு இந்தச் சிறப்பு மட்டுமல்ல, மேலும் ஏராளமான மருத்துவக் குணங்கள் பூண்டில் உள்ளது.
வெள்ளைப் பூண்டில் நிறைந்திருக்கும் அலைல் சல்பைடு என்னும் பொருள் புற்றுநோய் வராமல் தடுக்கும். குறிப்பாக இரைப்பை புற்றுநோயை பூண்டு தடுப்பதாக பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.
தினமும் பூண்டை உட்கொண்டு வருவதால் வைரஸ் மற்றும் பாக்டீரியா தாக்குதலில் இருந்து உடலை காத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. மொத்தத்தில், உடலில் நச்சுகள் சேராமல் தடுப்பதில் பூண்டு முக்கியப் பங்கு வகிக்கிறது. மாரடைப்பு மற்றும் இதர இதய நோய் பிரச்சினைகளில் இருந்து பூண்டு பாதுகாக்கிறது.
இதில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். அதுமட்டுமின்றி, கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையும் பூண்டுக்கு உண்டு. தொண்டை பிரச்சினைகளுக்கு  விடைகொடுக்கும் பூண்டில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பொருட்கள், தொண்டை பிரச்சினைகளிலிருந்து விடுவிக்கிறது.
தொண்டை எரிச்சல்களைக் குணப்படுத்துவதுடன், சுவாசப் பாதை தொற்றுகளின் தீவிரத்தையும் குறைக்கிறது. மேலும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது. பூண்டில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வலி நிவாரண குணங்கள் பல்வலிக்கு நிவாரணம் அளிக்கின்றன.

பாகற்காய் வேக வைத்த நீரை மதிய உணவிற்கு முன்பாக பருகுவதும் வாரம் 2-3 முறை பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்வதும் நீரிழிவுக்காரர்களின் கட்டுப்படாத சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் பயன்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.