19.10.16

கண்டங்கத்தரி SOLANUM SURATTENSE

வளரியல்பு -: கண்டங்கத்தரி அனைத்து வகை நிலங்களிலும் நன்கு
 வளரும். முள்ளுள்ள மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் ஊதா நிற  மலர்களையும் சிறு கத்தரிக்காய் வடிவிலான உருண்டையான  காய்களையும். மஞ்சள் நிற பழங்களையும் உடைய நேராக உயர்ந்து  வளரும் சிறு செடியினம்.



கண்டங்கத்தரி காய்





6. மருத்துவப்பயன்கள் -: கண்டங்கத்தரி இரத்த அழுத்தத்தினை சீர்
 செய்ய உதவுகிறது. ஆஸ்துமாவிற்கு இச்செடியினை நிழலில் உலர்த்தி  பொடிசெய்து உணவில் சேர்த்து உண்ணகுணமாகும். காரணமில்லாத வரட்டு
 இருமலுக்கும் இது நல்ல தொருமருந்து. கீள் வாதம், மார்புச்சளி,

 வியர்வை நாற்றம் ஆகியவற்றிக்கு நல்ல மருந்து.


கண்டங்கத்தரிவேர் 30 கிராம், சுக்கு 5 கிராம், சீரகம் 2 சிட்டிகை, கொத்தமல்லி 1 பிடி ஆகியவற்றை 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காச்சி 4 முதல் 6 முறை 100 மி.லி. வீதம் குடிக்க சீதக்காச்சல், சளிக்காய்ச்சல், நுரையீரல் பற்றிய எந்த காச்சலும் குணமாகும்.

கண்டங்கத்தரி சமூலம்(சமமூலம்:வேர்,காய்,தண்டு,பூ,இலை1 பிடி, ஆடாதோடை 1 பிடி, விஷ்ணுகாந்தி ,பற்படாகம் இரண்டும் 1 பிடி, சீரகம், சுக்கு வகைக்கு 10 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு  அரைலிட்டராக வரும்வரை கொதிக்க விட்டு ஆறவைத்து  முதல் முறை 100 மி.லி. வீதம் குடித்துவர புளுகாயச்சல்நிமோனியா காயச்சல்மண்டை நீர் ஏற்றக் காயச்சல் முதலியன தீரும்.

(கண்டங்கத்திரி குடி நீர்)கண்டங்கத்திரி வேர்ஆடாதொடை வேர் வகைக்கு 40 கிராம் திப்பிலி கிராம் சிதைத்து லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக்கி 100 மி.லி.வீதம் தினம் வேளை குடிக்க இரைப்பிருமல் ( ஆஸ்துமா ) என்புருக்கி ( க்ஷயம் ) ஈளைஇருமல்கப இருமல்பீனிசம் தீரும்.


திப்பிலி

1 ஆடாதோடை,பாவட்டை




2 விஷ்ணுகாந்தி



பற்படாகம் Oldenlandia corymbosa





பழத்தை உலர்த்தி நெருப்பிலிட்டு வாயில் புகைப்பிடிக்க பல் வலிகுணமடையும்.

13.10.16

இராசவள்ளிக்கிழங்கு Purple yam ,இராசவள்ளிக் கிழங்கு இனிப்பு கூழ்

இராசவள்ளிக்கிழங்கு Purple yam

ஊட்டசத்துகள் >விற்றமின் A,  விற்றமின் C,விற்றமின் B 6,விற்றமின்B12 ,கல்சியம்,அயன்,சோடியம்,பொட்டாசியம்,மக்னிசியம்






காய்ச்சல், மேக வெட்டை, தொழுநோய், கட்டிகள், மற்றும் அழற்சி மூல நோய் வராமல் தடுக்கும் ஊட்டசத்து கொண்டது.



இராசவள்ளிக்கிழங்கு இனிப்பு கூழ்


தேவையான பொருட்கள்
  • ராசவள்ளிக் கிழங்கு - 1
  • தேங்காய்ப்பால் (முதற்பால்) - 1/2 கப்
  • தேங்காய்ப்பால் (இடண்டாம்பால்) - 2 கப்
  • சீனி - 1 - 11/2 கப்
  • உப்பு - 1 சிட்டிகை 
செய்முறை
  • இராசவள்ளிக் கிழங்ககை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டவும் - ~2 கப் வர வேண்டும்.
  • பின்னர் ஒரு பாத்திரத்தில் தேங்காய் இரண்டாம் பால், கிழங்கு துண்டுகளைப்போட்டு அவிய விடவும்.
  • கிழங்கு நன்கு அவிந்ததும் சீனி, உப்பு போட்டு கலந்து மெல்லிய நெருப்பில் கொதிக்க விடவும்.
  • சீனி கரைந்ததும் கிழங்கை அகப்பை அல்லது மத்தால் நன்கு மசித்து கூழாக்கி விடவும்.
  • பின்னர் தேங்காய் முதற் பாலை விட்டு காய்ச்சவும்.
  • ஒன்று அல்லது இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.
  • சுவையான இராசவள்ளிக்கிழங்க் கூழ் தயார். சுடச்சுடவும் குடிக்கலாம். அல்லது ஆறவிட்டும் குடிக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
தேங்காய்ப்பாலில் அவிய விடுவதற்குப் பதிலாக தண்ணீரில் அவிய விட்டும் இறுதியாக முதற்பால் விட்டும் இறக்கலாம். தேவைக்கேற்ப சீனியை கூட்டி குறைக்கலாம். இதனை சிறிது வற்றக் காய்ச்சி தடிப்பான பதத்தில் எடுத்து புடிங் கிண்ணத்தில் ஊற்றி(வட்டமான சிறிய கிண்ணங்கள்) ஆறியதும் ஃபிரீஸரினுள் வைத்து சிறிது இறுகியதும் புடிங் போலவும் சாப்பிடலாம். அல்லது கேக் பானில் ஊற்றி ஃபிரீஸரில் வைத்து சிறிது இறுகியதும் துண்டுகளாக்கியும் சாப்பிடலாம்





7.10.16

மாணவர்கள் ஜாபக சக்தியை அதிகரிக்க Students strengthen brain capacity

மாணவர்கள் ஜாபக சக்தியை அதிகரிக்க

பிராணயாமம் செய்தல்(மூச்சுப்பயிற்ச்சி)
பிரணாயாமம்  செய்வது எப்படி? வலதுக்கை கட்டை விரலால் வலது மூக்குத் துவாரத்தை அடைத்துக் கொள்ளவும். இப்பொழுது இடது துவாரத்தின் மூலமாக காற்றை உள் இழுங்கள். இப்பொழுது உங்கள் வலதுக் கை மோதிர விரலால் இடது துவாரத்தை அடைத்துக் கொண்டு வலது துவாரத்தின் வழியாக காற்றை சற்று மெதுவாக வெளி விடுங்கள். இப்பொழுது வலது துவாரத்தின் மூலமாக காற்றை உள்  இழுத்து மீண்டும் இடது துவாரத்தின் வழியாக மெதுவாக காற்றை வெளி விடுங்கள். இது ஒரு சுற்று ஆகும். இது போல் நீங்கள் 10 முதல் 20 சுற்றுகள் வரை செய்யலாம்.

அதிகாலை 4.00am இருந்து 6.00am கல்வி கற்றல்.

நாம் ஒவ்வொரு மணிநேரமும்செய்யும் வேலைகளை கண்களை மூடி மனக்கண்களால் ரீவைன்ட் செய்து கொள்ளவேண்டும்.


கீரை வகை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.