25.6.14

கொய்யாஇலை-மருத்துவ பயன்கள்

கொய்யாஇலை
கொய்யா மரத்தின் இளம் இலைகள் வெப்பமண்டல நாடுகளில் பராம்பரிய மருத்துவத்திற்கு பயன்படுத்தபடுகிறது. இந்த இலையின் மருத்துவ பலன்களான ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருட்களான வைட்டமின் சி, மற்றும் க்யூயர்சிடின், ஃபிளாவனாய்டுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. கொய்யா  இலைகளை நன்கு கழுகி சுடுதண்ணீரில் கொதிக்கவிட்டு தேநீர் போன்று அருந்தினால் கொழுப்பைக் குறைக்கும், நீரிழிவை தடுக்கும், மேலும் வயிற்று  போக்கினால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த சிகிச்சையளிக்கும்.
வயிற்றுப்போக்கு


பாக்டீரியா காரணமாக வயிற்றுபோக்கு ஏற்பட்டால் கொய்யா இலையில் தேநீர் செய்து சாப்பிடவேண்டும். இந்த தேநீர் பருகினால் எந்த காரணத்தினால்  வயிற்றுபோக்கு ஏற்பட்டிருந்தாலும் குணப்படுத்திவிடும். கொய்யா இலையில் செய்யப்பட்ட தேநீரை பருகுவதால் குறைவான வயிற்றுவலி, குறைவான  தண்ணீரால் வெளியேற்றப்படும் மலம், அதிலிருந்து எளிதில் தீர்வு காண முடியும். கொய்யா இலை வயிற்று போக்கிற்கு சிறந்த தீர்வாக இருக்கும்  என்று ரிவிஸ்டா இண்ஸ்ட்டியூட்டோ நிறுவனம் 2008 ஆய்வு செய்தனர் அதில் கொய்யா இலைசாறில் வயிற்று போக்குக்கு பொதுவான காரணமாக  இருக்கக்கூடிய ஏரொஸ் பாக்டீரியா வளர்ச்சி தடுக்கப்படுவதாக கண்டறியப்பட்டது.
அதிக கொழுப்பு

இளம் கொய்யா இலையில் தயாரிக்கப்படும் தேநீரை பருகுவதால் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடின் அளவுகளில் பல மாற்றங்களை  ஏற்படுத்துகிறது. ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்ற நிறுவனம் 2010 ல் மேற்கொண்ட ஆய்வில் பங்கேற்பாளர்களுக்கு கொய்யா இலையில்  தயாரிக்கப்பட்ட தேநீரை பருக கொடுத்தனர். இந்த ஆய்வில் பங்கேற்ற பங்கேற்பாளர்களுக்கு குறைந்த மொத்த கொழுப்பு, குறைந்த அடர்த்தியுள்ள  கொழுப்புப்புரத நிலைகள் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இருந்தது தெரியவந்தது. அடுத்த எட்டு வாரங்களுக்கு பிறகு கொழுப்பு அளவுகளில் பல  மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றது என தெரிவித்துள்ளது

நீரிழிவு நோய்
கொய்யா இலையின் குடும்பம் ஆரோக்கியம் தரும் உணவுகளில் ஒன்றாக உள்ளது. நீரிழிவு நோயால் அவதிபடுபவர்கள் நீரிழிவை தடுக்க கொய்யா  இலையை மருந்தாகப் பயன்படுத்தலாம். வகை 2 நீரிழிவு நோயாளிகள் 12 வாரங்கள் தொடர்ந்து இந்த தேநீரை பருகினால் சர்க்கரையின் அளவில்  மாறுதல்கள் ஏற்படும். கொய்யா இலையை இளம் தளிர் இலைகளாக பார்த்து ஒரு கப் இலை எடுத்துக்கொள்ளுங்கள். இலைகளை நன்கு கழுகி  தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். 

15.6.14

ஆரோக்கியம் தரும் வீட்டு பொருட்கள்

200 மி.லி பாலில் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து காலை, மாலை 1 டம்ளர் சாப்பிட்டு வந்தால் இருமல் தீரும். நெல்லிக்காயை நீரில் போட்டு காய்ச்ச வேண்டும். பிறகு அதில் மஞ்சள் பொடி கலந்து காலை, மாலை சாப்பிட்டால் குடிப்பழக்கம் விரைவில் மறையும். தினமும் அகத்தி கீரையை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். நெல்லி கனியை அதிகம் சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும்.
உத்தாமணி(வேலிப்பருத்தி)


வல்லாரை, உத்தாமணி(வேலிப்பருத்தி)இலை, மிளகு இவற்றை சமஅளவு எடுத்துக்கொண்டு அரைத்து குண்டுமணி அளவு மாத்திரையாய் செய்து காலை, மாலை 1 உருண்டையை வெந்நீரோடு சாப்பிடவேண்டும். இப்படி செய்தால் எவ்விதமான காய்ச்சலும் குணமாகும். அடிக்கடி மாம்பழத்தை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நீங்கும்.வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும். எலுமிச்சம் பழச்சாற்றினை தேன் கலந்து குடித்தால், வறட்டு இருமல் குணமாகும்

நெல்லிக்காயை பற்களினால் நன்றாக மென்று சாப்பிட்டால் பற்களும், ஈறுகளும் உறுதியாகும். இஞ்சியை இடித்து சாறு எடுத்து அதனுடன் தேனை கலந்து தினமும் காலை, மாலை இருவேளை சாப்பிட்டால் ரத்த கொதிப்பு நோய் குணமாகும். சிறுநீரில் கல் அடைப்பு உள்ளவர்கள் பப்பாளிப்பழம் சாப்பிட்டால் கல் கரைந்து குணம் அடைவார்கள்.

துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்துக்கொண்டு இரவில் படுத்து காலையில் எழுந்து கழுவினால் முகம் அழகு பெறும். வல்லாரை 150 கிராம் 1 வசம்பு 15 கிராம் தூள் செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் ஞாபகசக்தி பெருகும்.  புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாக்ஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்..