11.10.14

நெல்லிமுள்ளி ரசம்


நெல்லிமுள்ளி(காய்ந்தநெல்லி தோல்)
நெல்லிமுள்ளி

தேவையான பொருள்கள்:
நெல்லிமுள்ளி = 1 கப்
மிளகாய் வற்றல்(காய்ந்தமிளகாய்) = 2
மிளகு= அரை ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
பூண்டு = 4 பல்
இஞ்சி = புளியங்கொட்டை அளவு
பெருங்காயம் = சிறிது
தனியா( கொத்தமல்லி)= 1 ஸ்பூன்
புளி = சிறிதளவு
கடுகு = அரை ஸ்பூன்
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
நெல்லிமுள்ளியை முதல் நாளே 2 கப் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் அந்த தண்ணீரை வடிகட்டி அதில் புளியைக் கரைத்துக் கொள்ள வேண்டும்.
மிக்ஸியில் பெருங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகு, மிளகாய் வற்றல், தனியா, சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்துச் சேர்க்கவும்.
உப்பு தேவையான அளவு சேர்த்து 4 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் கொதிக்க விடவும். கொதித்து வரும் போது தேவையான அளவு எண்ணெய் எடுத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
சுவையான நெல்லிமுள்ளி ரசம் தயார். நெல்லிக்காய் மிகவும் குளிர்ச்சியைக் கொடுக்கும். 
மருத்துவ குணங்கள்:
நெல்லியில் வைட்டமின் C மற்றும் வைட்டமின் B ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. வயிற்றுப்போக்கு, நீரிழிவு போன்றவற்றைக் குறைக்கும்.
பித்தத்தை குறைக்கும். கண் பார்வையை தெளிவாக்கும். இரத்தத்தை

தூய்மையாக்கும். மூலம், மலச்சிக்கல், வாய்வு, இருமல், சளி, வாந்தி, மஞ்சள்

காமாலை மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும்


5.10.14

வெள்ளறுகு enicostema axillare -மருத்துவ குணங்கள்





வெள்ளறுகு

வெள்ளறுகு
வெள்ளறுகு



வெளிறியஇலைகளை மாற்றடுக்கில் கொண்ட வெண்மையான பூக்களைக் கொண்ட சிறு செடி.இது சுமார் 5 – 30 செ.மீ.உயரம் வளரக்கூட்டயது. இதன் இலைகள்  15 செ.மீ.நீளத்திலும், 5 செ.மீ.அகலத்திலும் இருக்கும்.இதன் இலைகள் சாம்பல் நிறமாக தும்பை இலை போல் வளைந்து சுருண்டு இருக்கும் .பூக்கள் பால் வெள்ளை நிறமாக இருக்கும். கணுக்களில் பூக்கள் கதிர் போல் பூக்ககும்.இதன் தண்டுகள் சாம்பல் பூசினால் போல் இருக்கும்.

மருத்துவப் பயன்கள் –: வெள்ளறுகானது மலத்தை இளக்கி, வெப்பத்தை அகற்றி,பசியைத் தூண்டி, உடலை உரமாக்கும்  .இது காச்சல், வாதம்,தோல்வியாதி, வயிற்று உப்புசம், பாம்புக்கடி, அஜீரணம், மற்றம் தொழுநோய் ஆகிய நோய்களைக் குணப்படுத்த வல்லது. இதில் இரும்பு சத்து, பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெகனீசியம், சிலிக்கா,பாஸ்பேட். குளோரைடு, சல்பேட் மற்றும் கார்பனேட் உள்ளது.

வெள்ளறுகை அரைத்து கால் ஆணிகட்டின் மீது வைத்து பத்துபோல்
கட்டிவர குணமடையும்.

வெள்ளறுகு செடியை வேருடன் எடுத்து சுத்தமாகக்கழுவி இடித்து சாறு பிழிந்து 20 மி.லி.. முதல் 30 மி,லி. வரை பாம்பு கடித்திருப்பவர்களுக்கு உள்ளே கொடுத்துவர வாந்தி பேதியாகிநச்சு இறங்கும். அல்லது  கடிவாயில் செடியின் சக்கையை அரைத்து வைத்துக்கட்டநச்சு முறியும்.

வெள்ளறுகு செடியை தேவையான அளவு எடுத்து வெந்நீர் விட்டு அரைத்துகாலையில் சொறி,  தவளைச்சொறி சிரங்கு, மேகத்தடிப்பு உள்ளவர்கள் பூசி, ஒரு மணி நேரம் சென்ற பின்னர் பேய்பீர்க்கங்காய் கூட்டால் உடலைத் தேய்த்துக் குளித்து வந்தால் அவை குணமாகும்.





பீர்க்கங்காய் 


வெள்ளறுகு செடியை எடுத்து சுத்தம் செய்து நன்றாக இடித்து அதனுடன் பத்து மிளகு, ஒரு துண்டு சுக்கு, நான்கு சிட்டிகை சீரகம் ஆகியவைகளைத் தட்டி மண் சட்டியில் போட்டு, எண்ணூறு மி.லி. நீர்விட்டு அதனை இருநூறு மி.லி.யாக வற்றும் வரை நன்கு காச்சி வடிகட்டி காலை, மாலை இரண்டு வேளை நூறு மி.லி வீதம் அருந்தி வர கீள்வாதம், நரம்புக் கோளாறுகள் முதலியவை கட்டுப்படும். வெள்ளறுகுவை அரைத்து சிறு சிரங்குகளுக்கும் பூசி வரலாம்.


தேவையான வெள்ளறுகை வெண்மிளகுடன்சேர்த்து அரைத்து நீரில் கலந்து வடிகட்டி கொஞ்சம் பசுவின் வெண்ணெய் சேர்த்து அருந்தி வரஉடல் சூடு தணியும்.