14.9.17

கடுகு வகைகள்(mustard Category) வெண்கடுகு (White mustard) நாய்கடுகு(Cleome viscosa)

கடுகு வகைகள் > கடுகு,வெண்கடுகு,நாய்கடுகு
   

வெண்கடுகு,கடுகு 





நாய்கடுகு




                 வெண்கடுகு (White mustard)


வீக்கம் மற்றும் வலியை போக்க கூடியதும், கருப்பை கட்டிகளை கரைக்கவல்லதும், செரிமானத்தை தூண்டக் கூடியதும், இருமல், விக்கலை சரிசெய்ய கூடியதும், ரத்த ஓட்டத்துக்கு மருந்தாக பயன்படுவதுமான வெண்கடுகு பல மருத்துவ பலன்களை கொண்டது.

கடுகை போன்று பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது வெண்கடுகு. கடுகு வகையை சேர்ந்த இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். 

வெண்கடுகை பயன்படுத்தி கருப்பையில் ஏற்படும் கட்டிகளை கரைக்ககூடியதும், செரிமாணத்தை தூண்டும் மருந்து தயாரிக்கலாம். வெண் கடுகை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். அரை ஸ்பூன் வெண்கடுகு பொடி, ஒரு சிட்டிகை மிளகு, சிறிது உப்பு, 2 சிட்டிகை பெருங்காய பொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். 
இதை வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 முதல் 100 மிலி வரை எடுத்துக்கொண்டால், இது செரிமானத்தை தூண்டும். கருப்பை கோளாறுகளை சரிசெய்யும். வெண்கடுகு உள் உறுப்புகளை தூண்டக் கூடியது. இரையறை கோளாறுகளை சரிசெய்யும் தன்மை உடையது. சிறுகுடலில் உள்ள மென் திசுக்களை தூண்டக் கூடியது. மாதவிலக்கு கோளாறுகளை சரிசெய்யும். கருப்பையில் உள்ள நீர்கட்டிகளை கரைத்து, கருப்பைக்கு பலம் தரக்கூடியது.

வெண் கடுகை பயன்படுத்தி கெண்டைக்கால் தசையில் வீக்கம், வாயுக்கான மருந்து தயாரிக்கலாம். 2 ஸ்பூன் விளக்கெண்ணெய்யில், ஒரு ஸ்பூன் வெண்கடுகு பொடியை வறுக்கவும். பின்னர், நீர்விட்டு கொதிக்க வைத்து, அரிசி மாவு சேர்த்து களி பதத்தில் தயாரிக்கவும். இந்த களியை மெல்லிய துணியில் தடவி வலி, வீக்கம் இருக்கும் இடத்தில் கட்டி வைக்க வேண்டும். இதனால் வலி, வீக்கம் சரியாகும். 

வெண்கடுகை பயன்படுத்தி விக்கலுக்கான மருந்து தயாரிக்கலாம். அரை டம்ளர் அளவுக்கு நீர் எடுத்து கொதிக்க வைக்கவும். தனியாக ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் அளவுக்கு வெண்கடுகு பொடியை எடுத்துக்கொள்ளவும். இதில் வெந்நீரை ஊற்றி நன்றாக கலந்து 15 நிமிடம் வைத்திருந்தால் நீர் தெளிந்துவிடும். மேலே இருக்கும் தெளிந்த நீரை குடித்தால் விக்கல் சரியாகும்.விக்கலால் மது அருந்துபவர்கள், வயிற்று புண் இருப்பவர்கள் மிகவும் அவதிப்படுவார்கள். 

விக்கலை போக்க வெண்கடுகு மருந்தாகிறது. வெண்கடுகை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். கால் ஸ்பூன் வெண்கடுகு பொடியுடன் சிறிது தேன் சேர்த்து குழைத்து சாப்பிட இருமல் கட்டுப்படும். சுவாச பாதையில் ஏற்படும் அழற்சி, வீக்கத்தை குறைக்கும்.வெண்கடுகு, ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், இருமல், சளியை போக்கும். நுண்கிருமிகளை அழிக்கும் தன்மைகொண்டது. வலி நிவாரணியாகிறது. ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் தன்மை கொண்டது.

வெண்கடுகு,நாய்க்கடுகு  இரண்டையும் சமஅளவு எடுத்து  தினமும் அல்லது வாரம் ஒருமுறை சாம்பிராணி போடுவது போன்று புகைக்க செய்தால் நோய்கிருமிகள் ,பூச்சிகள்,விஷபூச்சிகள்  எதுவும் வீட்டை அண்டாது.










நாய்கடுகு(Cleome viscosa)

வேறுபெயர்_நல்வேளை,தைவேளை,காட்டுக் கடுகு






முதல் பருவ மழைக்குப் பின்னர் இந்தத் தாவரத்தை அதிகமாகக் காணலாம். தைவேளை என்கிற மாற்றுப் பெயரும் இந்த தாவரத்திற்கு உண்டு.முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படும். இலை, பூ, விதை, வேர் ஆகியவை அதிகமான மருத்துவப் பயன் கொண்டவை.

தாவரம் முழுவதும் ஒரு வித முக்கிய எண்ணெய் பரவிக் காணப்படுவதால் ஒரு விதமான மணமுள்ளதாகவும் பிசுபிசுப்பானதாகவும் இந்தச் செடி காணப்படும்.

ஓராண்டு வாழும் சிறுசெடிகள். நிமிர்ந்த வளரியல்பு கொண்டவை. தண்டில் நீண்ட வெண்மையான உரோமங்கள் காணப்படும். இவை இலேசாக ஒட்டும் தன்மை கொண்டவை. இலைகள் முட்டை வடிவமாகவும், ஐந்தாகக் கிளைத்தவை.

மருத்துவ பயன்கள்

காது வலி தீர இலைகளைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 3 துளிகள் அளவு காதில் விட வேண்டும்

இருமல் தீர ஒரு பிடி நல்வேளை இலைகளை, தேவையான அளவு உப்புடன் சேர்த்து அரைத்து பசையாக்கி சாப்பிட வேண்டும்.

சீழ் கட்டிகள் உடைவதற்கு நல்வேளை இலையை அரைத்தோ அல்லது வதக்கியோ சீழ் கட்டிகள் மீது பற்றுப் போட வேண்டும்

குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், மார்பு சளி குணமாக நல்வேளைப் பூக்களை சேகரித்து, கசக்கி, சாறு பிழிந்து ஒரு தேக்கரண்டி அளவு உள்ளுக்கு கொடுக்க வேண்டும்

குடல் தட்டைப் புழுக்களைக் கொல்ல நல்வேளை விதைகளை நெய் சேர்த்து வறுத்து, அரைத்து தூளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறுவர்களுக்கு ½ கிராம் பெரியவர்களுக்கு 4 கிராம் என்கிற அளவில் காலை மாலை மூன்று நாள்கள் உள்ளுக்கு கொடுக்க வேண்டும். சிறிதளவு வெந்நீர் குடிக்கலாம். நான்காம் நாள் விளக்கெண்ணெய் (ஆமணக்கு எண்ணெய்)
½ தேக்கரண்டி அளவு உள்ளுக்குக் கொடுக்க பேதியாகி குடலின் தட்டைப் புழுக்கள் வெளியாகும்.

ஆமணக்கு எண்ணெய்


புண்கள் குணமாக 10 கிராம் இலைகளை 100 மிலி நெய்யில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு அதனைப் புண்களின் மீது பூச வேண்டும்.

4.9.17

எள்ளு(Sesamum) தலைமுடி வளர எள்எண்ணெய் (நல்லெண்ணெய்)

நவதானியங்களில் ஒன்றான எள்
இளைத்தவனுக்கு எள், கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழிஉண்டு . 

நம் தமிழர் உணவுப் பழக்கத்தில் எள்  முக்கிய இடம் வகிக்கிறது. எளிய உணவு தானியங்களில் ஒன்றான எள் நமது உடலுக்கு நன்மை தரும் பல சத்துக்களை கொண்டுள்ளது. எள் நாவுக்குச் சுவை தருவதோடு உடலுக்கு மருந்தும் ஆகிறது.


எள்ளுசெடி




கோதுஉடைக்காதஎள்ளுவிதை



கோதுஉடைத்தஎள்ளுவிதை


கோதுஉடைக்காதஎள்ளுவிதை (கறுப்பு எள்ளு) மலத்தை இளக்கும் வல்லமை கொண்டது.

பெரும்பாலும் வெள்ளைஎள்ளு மருந்துகாகவும்உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது.

இது இந்தியா முழுவதும் பயிரிடப்படும் சிறிய செடி வகையாகும். இதற்கு திலம்(திலம் என்றால் எள். ராமர் தன் தந்தை தசரதருக்கும், சீதை எங்கிருக்கிறாள் என்று தனக்கு தெரிவித்த ஜடாயுவுக்கும் திலதர்ப்பணபுரி தலத்தில் எள்ளால் தர்ப்பணம் செய்ததால் இப்பெயர் வந்தது).

என்று மற்றொரு பெயர் உண்டு. இதன் தாவரவியல் பெயர் Sesamum . இதிலிருந்து பெறப்படும் எண்ணெய்தான் நல்லெண்ணெய். Sesaminமற்றும் sesamolin என்ற இரண்டு வேதிப் பொருட்கள் இருப்பதால் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது மேலும் இரத்த அழுத்தத்தை சீர்படுத்துகிறது.

எள்ளில் உள்ள கால்சியம் மிக அதிகம் உள்ளதால் எலும்புகள், பற்கள், நகங்கள் வலுவடைய இது உதவுகிறது. குறிப்பாக எலும்புகளின் அடர்த்தியை அதிகப்படுத்தும் தன்மை எள்ளில் உள்ள கால்சியத்திற்கு உண்டு. வளரும் குழந்தைகளின் ஆரோக்கியமும், மூளை வளர்ச்சியும் சீராக நடைபெற தரமான கால்சியச் சத்து போதுமான அளவு உடலுக்கு தேவை. இந்த கால்சியம் எள்ளில் இருப்பதால் தினமும் இதனை உபயோகப்படுத்தும் போது ஆரோக்கியம் மேம்படும். பெரியவர்களின் கால் மூட்டு தேய்மானம் கால்சிய சத்துக் குறைவால் ஏற்படுகிறது. இதற்கு எள் ஒரு சிறந்த மருந்து உணவுப் பொருளாக உபயோகமாகிறது.


எள்ளில் உள்ள சத்துக்கள்:

எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சியச் சத்தும் உள்ளது. மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின் ஈ, இரும்புச் சத்து, ஜீங்க் மற்றும் புரதச் சத்து உள்ளது என்று விஞ்ஞான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதனால் நாம் அடிக்கடி எள்ளை உட்கொள்வதினால் ஏற்படுத் நன்மைகளை காண்போம்.

சுவாச மண்டல ஆரோக்கியத்தை பராமரிக்கிறது
எலும்பு அடர்த்தியை பராமரிக்கிறது
எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கிறது.
கொழுப்பின் அளவை குறைக்கிறது
இரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது.

எள்ளுருண்டை



எள்ளுப்பாகு


இத்தகைய நன்மைகளைக் கொண்ட எள்ளை நாம் ஏதாவது ஒரு பக்குவத்தில் உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

எள்ளும், வெல்லமும் சேர்த்து செய்யப்படும் எள்ளுருண்டை அல்லது எள்ளு மிட்டாய் அடிக்கடி உட்கொள்ளலாம்.

ஏள், வெல்லம், தேங்காய் சேர்த்து பூரணமாக கொண்டு நீராவியில் வேக வைக்கும் கொழுக்கட்டை அல்லது மோதகம் போன்றவற்றை உண்ணலாம்.

சாதத்தில் எள்ளை பொடி செய்து சேர்த்து உண்ணுதல்

எள், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து எள்ளு பொடியை இட்லி, தோசை போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிட உபயோகிக்கலாம்.

எள்ளின் மருத்துவ பயன்கள்:

வைட்டமின் பி1.,பி6,நியாசின், தையாமின், ஃபோலிக் அமிலம், ரிபோபிளேவின் போன்ற வைட்டமின்கள் எள்ளில் அபரிதமான அளவில் உள்ளது. 100 கிராம் எள்ளில் 97 µp ஃபோலிக் அமிலம் இருக்கிறது. இது நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு தேவையோ அதில் 25 சதவித தேவையை பூர்த்தி செய்கிறது.
ஒரு கப் பாலில் உள்ள கால்சியச் சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. பால் சாப்பிட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்து விடும்.

மூட்டு வலி உள்ளவர்களுக்கு வலியையும், வீக்கத்தையும் எள் குறைக்கிறது. எள்ளில் உள்ள செம்பு சத்து, கால்சியச் சத்து, மக்னீசியம் சத்து போன்றவை மூட்டுகளின் ஜவ்வுகளுக்கு தேவையான பலத்தை கொடுக்கிறது.
எள்ளில் உள்ள செம்புச்சத்து இரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை அதிகப்படுத்துகிறது. இதனால் இருதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.

மாதவிடாய் வருவதற்கு முன் உடலில் ஏற்படும் மாற்றங்களான வயிறு உப்புசம், மார்பகங்களில் வலி, தலை வலி, உடல் கனத்து போதல் போன்றவை எள் சாப்பிடுவதால் குறைகிறது.

எள்ளில்  Phytpsterol  என்ற வேதிப்பொருள் அதிகம் உள்ளது. அதாவது 400 – 413 மி.கி அளவு 100 கிராம் எள்ளில் உள்ளது. இது மற்ற எந்த விதைகள் கொட்டைகளின் அளவை விட அதிகம். இவை இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்கிறது. மேலும் பல விதமான புற்று நோய் வராமல் தடுப்பதற்கு உதவுகிறது.
அசைவ உணவில் உள்ளதைக் காட்டிலும் சைவ உணவில் இரும்புச் சத்து மற்றும் ஜிங்க் சத்து எள்ளில் அதிக அளவு கிடைக்கிறது.
100 கிராம் எள் 573 கலோரி சக்தியை கொடுக்கிறது. 100 கிராம் எள்ளில் 18 கிராம் புரதச் சத்து உள்ளது. குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான புரதச் சத்து அதிகம் உள்ளது.


எள் எண்ணெய்

(நல்லெண்ணெய்)

பாரம்பரிய முறைஎண்ணெய்செக்கு

தலைமுடி வளர
எள்ளேண்ணெய் தினமும் தலைமுடிக்கு தடவிவர நன்கு வளரும்.தலை சூட்டை தணிக்கும்.


வைட்டமின் மற்றும் தாது உப்புகள்
நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக  செயல்படுகிறது. இது உடலில் கொழுப்பு சத்தை குறைத்து உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதை குறைக்கிறது. நல்லெண்ணெயில் உள்ள துத்தநாகம்,  எலும்புகளை பலப்படுத்துகிறது. தாமிரம், கால்சியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் உடல் நலத்திற்கு பயன்படுகிறது. மன அழுத்தத்தையும்  போக்குகிறது.

இனிப்பு, கசப்பு, காரம்
நல்லெண்ணெய் சற்று கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக்கூடியது.  ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு நோய்களைப் போக்க நல்லெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. நல்லெண்ணெய் சருமத்தின் ஈரப்பதத்தைச்  சமப்படுத்துகிறது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும்  நீங்கும். நல்லெண்ணெய் புத்திக்கு தெளிவு, கண்ணுக்கு குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றை தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு,  சொரி, சிரங்கு, புண் முதலியவற்றை தணிக்கிறது.


கண்நோய்கள் நீங்கும்
நல்லெண்ணெயை தினமும் 2 இல்லது 3 தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழி முட்டையின் வெள்ளைக்  கருவுடன் நல்லெண்ணெய் கலந்து பருக்களின் மேல் பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும். நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், கண் சிவப்பு,  கண் வலி, கண்ணில் நீர் வடிதல் மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும் என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆயில் புல்லிங்

உடலை மசாஜ் செய்வதில் நல்லெண்ணெயின் பங்கு முக்கியமானது. உடலுக்கு குளிர்ச்சியும் உள்ளத்திற்கு புத்துணர்வும் தருவதில்  நல்லெண்ணெய்க்கு ஈடு இணையில்லை. சூரிய ஒளிக்கதிரினால் ஏற்படும் கொப்புளங்களைப் போக்குவதில் நல்லெண்ணெய் மருந்தாக செயல்படுகிறது.  பாக்டீரியாகொல்லி, நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. பாதங்களில் ஏற்படும் பூஞ்சை நோய்களை போக்க வெண்ணீரில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி  பாதத்தை கழுவினால் நோய் தீரும். ஆயுர்வேதத்தில் ஆயில்புல்லிங் எனப்படும் மருத்துவமுறை உடலை உற்சாகமாக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது.  ஒரு கரண்டி எண்ணெயை சிறிதளவு வாயில் ஊற்றி நன்றாக நுரை வர கொப்பளித்து துப்பினால் பற்களும் ஈறும் பலப்படும்.

10.8.17

பருத்தி (Gossypium hirsutum L) பருத்திப்பால்

 பருத்தி



இலை,காய்





இந்தியா இலங்கை நாடுகளில் பெருமளவு ஆடைக்காக பயிரிடப்படுகிறது. இதில் வெண்பருத்தி ஆடை, நெய்வதற்கு பயன்படுகிறது. அதன் பஞ்சு கொண்டு தயாரிக்கப்படும் மெத்தையில் படுத்து தூங்கினால் ஆயுள் அதிகரிக்கும். இதன் இலை பூ பஞ்சு, பட்டை, வேர், வேர்பட்டை மருத்துவ குணங்கள் உடையது. ஐந்தாய்ப்பிரிந்த இலைகள் பச்சை சிறத்தில் அமைந்திருக்கும். 

மலர்கள் மஞ்சள் நிறத்துடனும் அமைந்திருக்கும். இதில் செம்பருத்தி, கொங்கிலவும் மருத்துவத்தில் பெருமளவு பயன்படுகிறது.. சிவப்பு நிற மலர்கள் உடையது செம்பருத்தியாகும். ஆனால் பஞ்சு வெண்மையாகவே இருக்கும் நோய்களில் தீர்க்க முடியாத நோய்கள் என்பது கற்பனை நோய்தான். அது என்ன கற்பனை நோய்? சிலருக்கு கை வலிப்பதாக கூறி கொண்டே இருப்பார்கள். எந்த மருந்து கொடுத்தாலும் இது தீராது. 

இது மனஅழுத்தம் ஏற்பட்டு அதனால் நரம்பு மண்டலம் பாதிப்படைந்து உண்டாகும் நோயாகும்.  இதற்கு பருத்தி வேரின் பட்டையை அரைலிட்டர் தண்ணீரில் போட்டு பாதியளவு சுண்டும் வரை காய்ச்சி வடிக்கட்டி 30மிலி அளவில் அரை மணிக்கு ஒரு முறை குடித்து வந்தால் நரம்பு கோளாறுகள் அதனால் ஏற்படும் கற்பனை நோய்கள் நீங்கும். இது செரிமாணத்தை தூண்டும். 

இலைக்கொழுந்தை நிழலில் காயவைத்து குடிநீரிட்டு கழிச்சல்களுக்கு கொடுத்தால் கழிச்சல் நிற்கும். உடல் தேறும்.  30கிராம் இலை அல்லது மொக்கை எடுத்து மசிய அரைத்து 80மிலி பசும்பாலில் கலந்து காலையில் ஒரு வேளை மட்டும் குடித்து வந்தால் பெண்களின் வெள்ளை போகுதல் முதலிய சிறுநீரக கோளாறுகள் நீங்கும். தீராத வயிற்று கடுப்பு ஏற்பட்டால் இலைச்சாறு 30மிலி எடுத்து 150 பசும்பாலில் கலந்து காலை மாலை குடித்து வந்தால் மூலம் வயிற்று கடுப்பு நீங்கும். 

36 கிராம் இச்சாற்றை பசும்பாலில் கலந்து  குடித்தால் சீதக்கழிச்சல் நீங்கும். இலையை அரைத்து பற்று போட்டால் கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும். தேள் கொட்டியவர்கள் அதன் கடுப்பு தாங்க முடியாமல் துன்பப்படுவார்கள். இவர்களுக்கு இலையுடன் அதே அளவு கடுகு சேர்த்து அரைத்து பற்று போட தேள்கடி கடுப்பு குறைந்து நலம் பெறுவீர்கள்.

பூ அல்லது பருத்தி விதைகளை அரைத்து பற்றுபோட தீக்காயங்கள் ஆறும். பஞ்சை கருக்கிப்பொடித்து புரையோடிய புண்களுக்கு தடவ விரைந்து ஆறும். விதைகளை தோள் நீக்கி பொடித்து ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை 200மிலி பசும்பாலில் கலந்து குடித்து வர நரம்பு மண்டலம் வலுப்பெறும்.

100கிராம் விதையை சிதைத்து எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 500மில்லியாக காய்ச்சி வடித்து மூன்று வேளை குடித்து வர வயிற்றுகடுப்பு, முறைக்காய்ச்சல் நீங்கும். பருத்தி  விதையின் மூலம் எடுக்கப்பட்ட பருத்தி விதை எண்ணெயை தடவினால் அரிப்பு, தோலில் தோன்றும் புள்ளிகள் அக்கிபுண், சொறி நீங்கும். பூவை தண்ணீர் விட்டு அதனுடன் அளவாக சர்க்கரை சேர்த்து பாகு பதமாக காய்ச்சி பாட்டிலில் வைத்துக்கொண்டு நாள்தோறும் காலை, மாலை 30மிலி குடித்து வந்தால் நரம்பியல் நோய்கள், கற்பளை நோய்கள் அனைத்தும் நீங்கும். 

மேலும் சிறுநீர் நோய்கள் தணியும் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். இரண்டு பருத்தி மொக்கை பசும்பால் விட்டு அரைத்து விழுங்கினால் மேகநோய்கள் நீங்கும். இரத்த பித்த நோயும் நீங்கி நலம் உண்டாகும். 

பருத்திப்பால்



தேவையானவை

பருத்தி விதை - 2 கைபிடி
கருப்பட்டி - 100 கிராம்
தேங்காய் பால் - அரை மூடி
சுக்கு - அரைவிரளளவு
அரிசி மாவு - 2 ஸ்பூன்
ஏலக்காய் - 2

செய்முறை

பருத்தி விதையை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் ஊறிய விதையை மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பால் எடுக்க வேண்டும்.
கருப்பட்டியை தூளாக்கி ஒரு கப் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி கொள்ளவேண்டும் .ஓரு பாத்திரத்தில் பருத்திவிதை பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும் .
ஒரு கொதி வந்த உடன் கருப்பட்டி கரைசல், தேங்காய் பாலையும் ஊற்றி காய்ச்ச வேண்டும்.
இந்த கலவை கொதிக்கும் போது அரிசி மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து அக் கலவையை கொதிக்கும் பருத்தி பாலில் சேர்த்து கரண்டியால் தொடர்ந்து இரண்டு நிமிடம் கிளறி பாத்திரத்தை இறக்கி விடவேண்டும்.
சுக்கை சிறிது வறுத்து பொடியாக்கி ,ஏலக்காயை பொடியாக்கி இறுதியில் சேர்க்க வேண்டும்.பருத்திப்பால் ரெடி


செய்முறை 2
பருத்திப்பால் 
தேவையான பொருட்கள்: பச்சரிசி – 100 கிராம் , பருத்தி விதை – 50 கிராம் தேங்காய் பெரிய மூடி – 1 முந்திரி – சிறிதளவு சுக்கு – சிறிதளவு ஏலக்காய் – 3 கருப்பட்டி – வட்டு (பெரியது)


 செய்முறை
பருத்திவிதையை தண்ணீரில் 6 மணிநேரம் ஊற வைக்கவேண்டும். பச்சரிசியை மிக்ஸியில் ரவை பதத்திற்கு பொடித்துக்கொள்ளவும். ஊறிய பருத்தி விதையை தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து பால் எடுக்கவும். கருப்பட்டியை நன்றாக பொடித்து அதில் தண்ணீர் விட்டு கரையும் வரை காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். தேங்காய் முழுவதையும் துருவி, அதில் முக்கால் பங்கு எடுத்து தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் 6 டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் பொடித்து வைத்துள்ள அரிசியை போட்டு சிறிதுநேரம் வேகவிட வேண்டும். கொதி வந்தவுடன் தீயை குறைத்துக்கொண்டு, பருத்திப்பாலை ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும். பருத்திப்பால் பச்சை வாசனை போனவுடன் கருப்பட்டி பாகை சேர்க்கவும். பின்னர் சுக்கு, ஏலக்காய், மீதமுள்ள தேங்காய் துருவல், வறுத்த முந்திரி ஆகியவற்றை சேர்த்து கிளறவும். தேங்காய் பாலை கடைசியாக ஊற்றவேண்டும். அதன் பிறகு கொதிக்கவிட வேண்டாம்.
பருத்திப்பால் ரெடி

பருத்திஎண்ணெய்

23.7.17

ஆரோக்கியஇனிப்பு பனங்காய்ப்பணியாரம் palmyra tree fruit sweet

பனம்பழம்கிடைக்கக்கக்கூடிய காலப்பகுதி ஆடிதொடக்கம்புரட்டாதிவரை




பனம்பழசாறு


பனங்காய்ப்பணியாரம்

தேவையானவை:
பனம்பழம் 2
மைதாமா (கூப்பன்மா)250g
சீனிorகருப்பட்டி100g
மரக்கறிஎண்ணெய்200ml
செய்முறை:
பனம்பழத்தைநன்கு சுத்தமாககழுவி பின்னர்தோலைசுத்தமாக உரித்துஒருபாத்திரத்தில்இட்டு400ml தண்ணீர்விட்டுகைகளால்சாறுபுழியவும் பின்னர்சாற்றைவடிகட்டிஒருபாத்திரத்தில் எடுத்துவைக்கவும்.ஒருசட்டியை(வானலியை) அடுப்பில்வைத்துஅதில்பனம்பழசாறைவிட்டுசீனியையும்சேர்த்துநன்கு பாகுபதமாககாச்சவும் பின்னர்இறக்கிஆறவைக்கவும். ஆறியவுடன்அதில்மைதாமாவைபோட்டுநன்குகுழைத்துக்கொள்ளவும்
பின்னர்ஒருசிறியசட்டியில்200mlஎண்ணெயைவிட்டுஅடுப்பில்நன்கு கொதிக்கவிடவும்கொதித்தவுடன்குழைத்துவைத்தமாவைசிறுஉருண்டை அளவில்எடுத்துஎண்ணையில்போட்டுபொன்னிறமாகவரும்வரைபொரித்து ஏடுத்துக்கொள்ளவும்.
.சூடானபனங்காய்ப்பணியாரம்தயார்.





11.4.17

கண்பார்வை தெளிவாக சிறப்பு திராதகா பயிற்சி. 8 Trataka Exercises for Good Health of Your Eyes

கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல’ என்றார் வள்ளுவர். அதையே ’கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சுக் கலப்பில் காதல்தான் கருவாச்சு’ என்றார்கள் நம் திரைப் பாடலாசிரியர்கள். கண்கள்தான் உலகின் அத்தனை அழகையும் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றன. வாயால் சொல்லிவிடமுடியாத உணர்வுகளைக்கூடக் கண்கள் எளிதில் வெளிப்படுத்திவிடும். அதனால்தான் கண்ணுக்கும் மூளைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. 
தாயின் வயிற்றில் நாம் கருவாக உருவாக ஆரம்பித்த சில நாட்களிலேயே கண்ணுக்கும் மூளைக்குமான தொடர்பு ஆரம்பித்து விடுகிறது. கருத்தரித்த இரண்டு வாரங்களுக்குள் கண்கள் வளர ஆரம்பிக்கின்றன. பார்வை நரம்பும், விழித்திரையும் மூளையிலிருந்துதான் ஆரம்பிக்கின்றன. விழித்திரை என்பது உண்மையில் மூளையின் ஒரு பகுதிதான். எனவே மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் பயிற்சிகள் கண்களுக்கு நன்மை செய்பவையாக உள்ளன. 
பினியல் சுரப்பி (Pineal gland) என்பது நமது மூளையின் நடுப்பகுதியில் உள்ள ஒரு மிகச்சிறிய சுரப்பி. உடலின் வெளிப்புறத்தில் இருந்து பார்க்கும்போது இது நெற்றியின் நடுவே அமைந்துள்ளது. இது மூன்றாவது கண் என்றும் சொல்லப்படுகிறது. பினியல் சுரப்பியிலிருந்து சுரக்கும் மெலட்டோனின் (Melatonin) ஹார்மோன் தூக்கத்தை வரவழைப்பது, தூக்கத்திலிருந்து எழுப்புவது என நமது உறக்க சுழற்சியைக் கையாள்கிறது. பிரான்ஸ் மெய்யியல் அறிஞர் ரெனே டேக்கார்ட் (Rene Descartes) பினியல் சுரப்பியை ‘ஆன்மா அமர்ந்திருக்கும் இருக்கை’ என்கிறார். இந்திய மெய்ஞ்ஞான முறைகளில் மூன்றாவது கண், ஞானத்தை அடையும் வழியாகக் கருதப்படுகிறது. மூன்றாவது கண்ணின் செயல்பாட்டை மேம்படுத்த திராதகா (Trataka) என்ற யோக முறை பின்பற்றப்படுகிறது. கண்களை மூடிக்கொண்டு புருவ மத்தியில் அழுத்தத்தை உணரும் தியானமாகவும் இது செய்யப்படுகிறது. ஒரு மிகச்சிறிய பொருளை, கருப்புப் புள்ளியை, மெழுகுவர்த்திச் சுடரை கவனத்தை வேறு எங்கும் சிதறவிடாமல், கண்களை இமைக்காமல் சிறிது நேரம் உற்றுப்பார்ப்பதுவே திராதகா யோக முறையாகும். திராதகா பயிற்சிகளைத் தொடர்ந்து செய்ய நமது கண் பார்வை தெளிவாகும். அது மட்டுமல்லாமல் இது பினியல் சுரப்பிச் சார்ந்த பயிற்சி என்பதால் தூக்கமின்மை, மனஅழுத்தம், கவனக்குறைவு போன்றவற்றுக்கும் தீர்வு தரும். 

திராதகா பயிற்சிகள் 
மிக எளிதில் செய்யக்கூடிய சில திராதகா பயிற்சிகளைப் பார்ப்போம்.. 
மலர் :

உள்ளங்கையில் பாதி அளவு இருக்கக்கூடிய ஒரு மலரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அதைக் கண் இமைக்காமல் சில நிமிடங்கள் உற்றுப்பார்க்க வேண்டும். மிகவும் வெளிச்சமான அறையில் இந்தப் பயிற்சியைச் செய்யும்போது சிவப்பு, ஊதா போன்ற அடர் நிறத்தில் உள்ள மலரைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அறையில் வெளிச்சம் குறைவாக இருந்தால் மஞ்சள், வெண்மை போன்ற நிறங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
புகைப்படம் :
கடவுள் அல்லது உங்களுக்குப் பிடித்த, தெய்வத்தன்மை உடைய ஒரு புகைப்படத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். ஒரு வெள்ளைத்தாளை எடுத்துக்கொண்டு புகைப்படத்தில் உள்ள முகத்தை மட்டும் விட்டுவிட்டு மற்ற எல்லாப் பகுதிகளையும் மறைத்து விடவும். இந்தப் புகைப்படத்தை உங்கள் கண்களிலிருந்து இரண்டு அடி தூரத்துக்கு அப்பால் வைக்க வேண்டும். கண்களை இமைக்காமல் இந்தப் புகைப்படத்தைச் சில நிமிடங்கள் பார்க்கவேண்டும். இதைத் தொடர்ந்து செய்யக் கண்பார்வை தெளிவாகும். 
மெழுகுவர்த்திச் சுடர் :
  
இருட்டு அறையில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்க வேண்டும். கண்களை இமைக்காமல் ஐந்து முதல் பத்து நிமிடத்துக்கு இதைப் பார்க்கவேண்டும். கண்பார்வை குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இது மிகச் சிறந்த பயிற்சி. ஒருநாள் கூட இடைவெளி விடாமல் காலை, மாலை என இரு வேளையும் இதைச் செய்யவேண்டும். கண்புரை, கிட்டப்பார்வை, வலிப்பு உடையவர்கள் இந்தப் பயிற்சியைச் செய்யக்கூடாது. 
இருட்டு அறை :
இருட்டான அறையில் அமர்ந்து ஐந்து முதல் பத்து நிமிடத்துக்குக் கண்களை இமைக்காமல் இருளைப் பார்க்கவேண்டும். 
வானம் :
நீல நிறத்தில் பரந்து விரிந்திருக்கும் வானத்தை வைத்த கண் மாறாமல், கண் இமைக்காமல் பார்க்கவேண்டும். 
வெற்றிலை :
ஒரு வெற்றிலையை எடுத்துக்கொண்டு அதன் நடுவில் வட்டமாகக் கறுப்பு மையைப் பூசிக்கொள்ள வேண்டும். அந்த இலையை ஒரு அட்டையில் ஒட்டி வைக்க வேண்டும். கண்களிலிருந்து இரண்டு அடிக்கு அப்பால் இதை வைத்துக்கொண்டு கண் இமைக்காமல் ஐந்து நிமிடத்துக்கு இதை உற்றுப்பார்க்க வேண்டும். 
ஊசி :
சுவற்றில் ஒரு நூலைக் கட்டி அதில் ஊசியைத் தொங்கவிட வேண்டும். வேறு எங்கும் கவனத்தைச் சிதறவிடாமல், கண் இமைக்காமல் ஊசியைச் சில நிமிடங்களுக்கு உற்றுப்பார்க்க வேண்டும். 
மூக்கின் முனை :
மூக்கின் முனையை உற்றுப்பார்ப்பது, புருவத்துக்கு இடைப்பட்ட இடத்தை உற்றுப்பார்ப்பது ஆகியவையும் கண் பார்வையைத் தெளிவாக்கும். 
இந்தப் பயிற்சிகளைச் செய்யும்போது கண்களை இமைக்கவோ, உருட்டவோ கூடாது. ஆனால் கண்களை இமைக்கக்கூடாது என்பதற்காகக் கண்களைக் கஷ்டப்படுத்தக்கூடாது. பயிற்சியின் தொடக்க நிலையில் பத்து நொடிகள் கண்களை இமைக்காமல் இருந்தால்கூடப் போதுமானது. தொடர் பயிற்சியின் மூலம் இந்தக் கால அளவை அதிகரிக்க முடியும். யோக ஆசிரியரிடம் உரிய பயிற்சி பெறாதவர்கள், பத்து நிமிடங்களுக்கு மேல் இதைச் செய்ய முயற்சிக்க வேண்டாம். இது எளிய பயிற்சி என்பதை மனதில் கொண்டு செயல்பட்டால் பலன்கள் கிடைக்கும். 

8 Trataka Exercises for Good Health of Your Eyes



Trataka is a simple method of meditation where you set your mind willfully on a specific object, and later on a specific idea or concept. The very term ‘trataka’ means staring steadily at an item placed right in front of your eyes without blinking. Your eyelids shouldn’t flicker and your eyeballs should remain steady.
There are two types of trataka, external and internal. The external type means focusing on an actual object outside with open eyes, while the internal one means concentrating on a subtle element within, with closed eyes. In internal trataka, people usually focus on the area between their eyebrows.
In this post, you’ll learn how to do 8 external trataka exercises by focusing on external objects.
8 Trataka Exercises For Good Health Of Your Eyes

8 Trataka Exercises

1. Dot On A Leaf

Pick a leaf the size of a palm, and make a black dot in the center that’ll be the size of a pea. You can draw the dot using a black castor oil, or regular paint. Then, fix the leaf on a wall or cardboard, and sit comfortably 2 feet away from it, making sure the leaf is placed at your eye level. Stare at the dot fully concentrated for 5 to 10 minutes without moving the eyelids. Do this every morning and evening.

2. Candle Flame


This exercise is very simple. You just need to light a candle and turn off all the lights in the room. Stare at the flame in the dark room for 5 to 10 minutes, and try to do this without blinking. Do this exercise every morning and evening. It is recommended for people with eye defects, especially children.

3. Darkness


Once again, turn off all the lights in the room, and focus on the darkness for 5 to 10 minutes with your eyes open all the time.

4. Blue Sky


This exercise will let you feel becoming one with the sky. Sit in an open place and stare at the endless blue sky. Try to do this without blinking.

5. Photograph


For this exercise you need a small photo of some deity, such as God. Cover the photo with a blank paper, but make sure the face of the deity or God is seen, by previously cutting a 2-inch circular hole on the blank paper. The photo should be two feet away from you and placed at the same height as your eyes. Concentrate at the photo for 5 to 10 minutes.

6. Crystal


If you have a crystal, you can use it in an external trataka exercise. Put it two feet away from you at the same height as your eyes and focus on it. Crystals are powerful stones in gemology, and are believed to possess healing properties.

7. Flower


Choose a palm-sized flower with dark color, such as purple or red, and place it in a well-lit room. Focus on the flower for 5 to 10 minutes. As an alternative, you can use a flower with light color, such as white or yellow, in a dark room.

8. Needle


Keep a needle hanging on the wall, and make sure there’s no visible objects around it. Focus on the needle for 5 to 10 minutes not allowing any other thought to come to your mind.

Benefits of Practicing Trataka

These exercises help treating various eye disorders. Those wearing spectacles, or anyone with poor eyesight should do them for 5 minutes a day. Besides improving your eyesight, trataka has shown to be helpful in the treatment of insomnia, depression, anxiety, allergy, poor concentration, postural problems, and memory.

1.4.17

மருத்துவக் குறிப்புகள்


நன்றி-தினக்குரல்(நலம் தானா)

அஸ்வகந்தா}





திரிபலா}