16.7.14

மருத்துவக்குறிப்புகள் சில



*
தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.

   இருமல்சளி நீங்கும்

*
சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் 
    ஆஸ்துமாகாய்சல் முதலியவற்றை நீக்கும்


*
கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை
  
  கேழ்வரகில்  செய்த  உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து,
     
கால்சியம் உள்ளது

*
வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும்

   பித்தம் குறையும்.

*
தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கண் 

   பார்வை தெளிவு பெறும்

*
அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.

*
சாதாரண வாய்வுப் பிடிப்பிற்கு சுக்கையும்(வேர்க்கொம்பு),         

    பனை வெல்லத்தையும் கலந்து கொதிக்கவைத்து வடிகட்டி குடித்தால் போதும்

*
மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் 

    ஆசனக்கடுப்புமூல நோய் குணமாகும்.

*
கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் 

    தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் குடித்தால் அஜீரணம் சரியாகிவிடும்.

* முள்ளங்கி கீரையில் வைட்டமின் சத்து உள்ளது. இக்கீரை 
   தொற்று  நோய்களை  விரட்டி அடிக்கும்.

* உடல் எடை குறைந்தவர்கள் வாழைப்பழம் தினமும் இரவில் உண்டு வந்தால் 
   எடை கூடும்

No comments:

Post a Comment