7.11.14

சிறுகண்பீளை Aerva lanata -மருத்துவ குணங்கள்

சிறுகண்பீளை(சிறுபீளை)


 இது சிறு செடிவகையை சார்ந்தது  ஈரப்பாங்கான இடங்களில்

 பரவலாக வளர்கிறது.இதன் இலைகள் சிறியதாக நீள் வட்டவடிவில்

 இருக்கும்ஒவ்வொரு இலைக்கும் இடையில் பூக்கள் இருக்கும் பூக்கள்
 தண்டுடன் ஒட்டி அவல் போன்ற வடிவமாக இருக்கும்.
 இதன் எல்லாபாகமும்மருத்துவதற்குப் பயன்படுத்தப் படுகிறது

 மருத்துவ குணங்கள்-இது சிறு நீரைப் பெருக்கி   சிறுநீரகற்களை கரைக்கும்  வல்லமை உடையது.


*சிறு கண் பீளை இலையை இடித்து சாறு எடுத்து பதினைந்து மி.லி.வீதம்  மூன்று வேளை அருந்தி வரநீர் எரிச்சல், நீரடைப்பு குணமாகும்.


*கருத்தரித்த பெண்களுக்கு ஏற்படும் தளர்ச்சியை நீக்கி உடலுக்கு வன்மை  கொடுக்க இதன் வேரைக் கொண்டு செய்யப்படும் கஞ்சி நல்லது.


*சிறுகண் பீளை வேர்ப்பட்டையையும், பனைவெல்லத்தையும் சம அளவாக

 எடுத்து நன்கு அரைத்து இருநூறு மி.லி.பசும் பாலுடன் கலந்து  தினந்தோறும்

 இரண்டு வேளை அருந்தி வந்தால்நீரடைப்பு, கல்லடைப்பு, முதலிய

 நோய்கள்குணமாகும்.


   
 *இதன் வேரைத்தட்டி சிறிய மண்பானையில் இட்டு சிறிதளவு நீர்

  விட்டு  சுண்டகாய்ச்சி வடிகட்டி வேளைக்கு

    1.5 
அவுன்ஸ் அளவு தினம் 2 -3 வேளை உட்கொள்ள


  நீர்கட்டுகல்லடைப்புசதையடைப்பு போம் .

  

No comments:

Post a Comment