26.9.15

முசுட்டைக் கொடி

முசுட்டைக்கொடி

முசுட்டை இலை





முசுட்டை இலையில் அதிகளவு அயன் சத்து உள்ளது .ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் உகர்ந்தது.இதை தினமும் வறுவல் செய்துஉணவில் சேர்த்து உண்ணலாம்.

1.6.15

சுண்டங்கத்தரி solanum torvum மருத்துவ குணங்கள்




சுண்டங்கத்தரி பூ

http://settikathir.blogspot.com/சுண்டங்கத்தரி

http://settikathir.blogspot.com/சுண்டங்கத்தரி


http://settikathir.blogspot.com/சுண்டங்காய்
சுண்டங்காய் வத்தல்
(உலர்ந்தசுண்டங்காய்)

சுண்டங் காயில் அதிகமான இரும்புச் சத்து உள்ளது. மலச்சிக்கலைப் போக்கும். உணவை ஜீரணிக்கச் செய்யும் நெஞ்சுச் சளியைப் போக்கும். வாய்ப்புண், வயிற்றுப்புண், கர்ப்பப்பைப்புண், இவற்றை குணமாக்கும் கைவலி, கால்வலி, இடுப்பு வலி தீரும்.
சுண்டங்காய் வற்றலை எடுத்து நல்லெண்ணெயில் வறுத்த பின்னர் இடித்துத் தூளாக்கி பகலில் 1 பிடி சோற்றுடன் தேவையான அளவு தூளைச் சேர்த்து பிசைந்து சாப்பிட்ட பின் வழக்கம் போல உண்ணலாம். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டால் போதும் குடலில் உள்ள கிருமிகள் வெளியேறி விடும்.
சுண்டங்காய் வேர்மற்றும் மஞ்சள் தூள் இரண்டையும் கலந்து வைத்து  மூக்கடைப்பு ஏற்படும் சந்தர்ப்பத்தில் எடுத்து நுகர்ந்தால் மூக்கடைப்புக் குணமாகும்.

20.3.15

தலைமுடி பிரச்சினைக்கான இயற்கை சிகிச்சை

தலைமுடி பிரச்சினைக்கான இயற்கை சிகிச்சை
பொடுகு,தலைவறட்சி.புழுவெட்டு,வழுக்கை,தலைஉஸ்ணம் தலைமுடியில் ஏற்படும் ஏனைய நோய்களையும் இந்த சிகிச்சை மூலம் முற்றுமாக குணப்படுத்த முடியும்.
சின்னவெங்காயம்

மாதுளை

தேவையானவை >சுத்தமான சின்னவெங்காயம்,மாதுளை கோது(சக்கை)
சிகிச்சை முறை > வாரம் இரண்டு முறை செய்யவேண்டும். முதல்நாள் சின்ன வெங்காயத்தை நன்கு அரைத்து பேஸ்டாக எடுத்து தலையில் பூசி 15 நிமிடம் ஊறவிடவேண்டும் பின்னர் தலைக்குக்குளிக்கவும்.இரண்டாம் நாள் மாதுளை கோதை(சக்கையை) அரைத்து பேஸ்டாக எடுத்து தலையில் பூசி 15 நிமிடம் ஊறவிடவேண்டும் பின்னர் தலைக்குக்குளிக்கவும்.இவ்வாறு நாள் செய்துவர நோய் குணமடையும்.
சின்னவெங்காயம் >இதன் சாறு தலையில் உள்ள அழுக்குகளை நீக்கி தலையிலுள்ள  உஸ்ணத்தை போக்கி தலைக்கு குளிர்சியை. அளிக்கிறது மயிர்க்கால்களுக்கு ஊட்டத்தை அளிக்கிறது. கண்ணுக்குகுளிர்சியை அளிக்கிறது.

மாதுளை கோது(சக்கை) இதன் சாறு தலையிலுள்ள அழுக்குகளை நீக்கி மயிர்க்கால்துவாரங்களை விரிவடைய வைக்கிறது அதோடு புதிய வலுவான முடி வளர்வதற்கு வளி செய்கிறது.

7.11.14

எருக்கு calotropis gigantea -மருத்துவகுணங்கள்>எருக்கு வாததைலம்


நீலஎருக்கு

வெள்ளெருக்கு



நாம் அவ்வளவாகக் கண்டுகொள்ளாத எருக்கஞ்செடியில் பலவகையான மருத்துவகுணங்கள் உள்ளது. இதில் இரண்டு வகை உள்ளது (நீலஎருக்கு,வெள்ளெருக்கு) நீலஎருக்கு நீலநிறபூவை கொண்டு காணப்படும் வெள்ளெருக்கு வெள்ளை நிறபூவை கொண்டுகாணப்படும். இதில்வெள்ளெருக்கு அரியவகை ஆகும் . 

குறிப்பாக வெள்ளை எருக்கன் செடிக்கு விசேஷ மருத்துவக் குணங்கள் இருக்கின்றன.

* எருக்கின் இலை, பூ, வேர், பால் அனைத்தும் சிறப்பான மருத்துவ குணங்கள் நிறைந்தவை. எருக்கம் இலையை வதக்கிக் கட்ட கட்டிகள் பழுத்து உடையும். செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதன் மீது எருக்கின் பழுத்த இலையை  வரிசையாக அடுக்கிக் குதிகாலால் அழுத்தி மிதித்து வர குதிகால் வாயு நீங்கும்.

* இலைகளைக் காய வைத்து எரித்து, அதிலிருந்து வரும் புகையை மூக்கினுள் இழுக்கஆஸ்துமா இருமல் போன்ற உபாதைகள் குறைந்து விடும்.

* எருக்கு இலைகளை மூட்டை கட்டி சூடாக்கி வெதுவெதுப்பாக நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஒத்தடம் கொடுத்தால் அங்கு ஏற்படும் வலி குறைந்துவிடும்.

* காய்ந்த இலைகளைப் பொடித்து தூள் ஆக்கி புண்கள் மீது தூவ அவை விரைவில் ஆறி விடும். எருக்கம் இலைச்சாற்றை மஞ்சள் தூளுடன் கலந்து கடுகு எண்ணெயில் வேக வைத்து தோலில் ஏற்படும் படை, சொறி, சிரங்குகளில் பூசி வர விரைவில் குணமாகும்.
கடுகு எண்ணெய்


* எருக்கம் வேரின் தோலை சிவப்பு அரிசி வடித்த கஞ்சியுடன் அரைத்து யானைக்கால் நோய்க்கு பற்றிடலாம்.    

* தேள் கடித்த இடத்தில் எருக்கின் பாலைத் தடவி வர விஷத்தின் தீவிரம் உடனே குறையும். பொதுவான விஷக்கடிகளுக்கும் இதுபோல பயன்படுத்தலாம்.

*எருக்குஇலைகளை நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிய  எண்ணெயை மூட்டு வலி, மூட்டு வாதம், இடுப்பு வலி, தொண்டை நரம்பு வலி  ஆகியவற்றுக்கு வலியுள்ள பாகத்தில் பூசினால் குணமாகும்.


*சிலருக்கு முகம் அழகாக இருக்கும். ஆனால், பல் அசிங்கமாக இருக்கும். முத்துப் போன்ற பற்களில் மஞ்சள்நிறக் கறைகள் படிந்து முகத்தின் அழகையே கெடுத்துவிடும். இதைப் போக்கி பற்களை பளபளப்பாக்கிட எருக்கு இலைகளை நிழலில் உலர வைத்து அத்துடன் மிளகு சம அளவில் சேர்த்து, அரைத்து பவுடராக்கிக் கொள்ள வேண்டும். இதைப் பல் பொடியாக, பல்லில் தேய்த்தால் கறைகள் நீங்கும்.


*எருக்கு இலைகளை நல்லெண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொள்வார்கள். பக்கவாதம் நீங்கிட இதைத் தடவி மசாஜ் செய்வார்கள்.


எருக்கு வாததைலம்
தேவையானபொருள்>200ML நல்லேண்நெய் >துரிதமாக தோலில் ஊடுருவும் தன்மை கொண்டது.   
                         >10எருக்கு இலை வலியை குணப்படுத்தும்
                         >20 எருக்கு பூ>இது நரம்புகளுக்கு புத்துணர்ச்சிகொடுக்கும் தன்மை கொண்டது.              
                    செய்முறை
 எருக்கு இலையை,பூவை சிறுதுண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.பின்னர் சட்டியில் நல்லேண்னையை கொதிக்கவிடவும் நன்கு கொதித்தவுடன் அதில் இலை,பூவை போட்டுகாய்ச்சவும். இலை,பூவின் சாறு எண்ணெயில் இறங்கும் வரை எண்ணெய் மெல்லியபச்சைநிறமாக வரும்வரை காய்ச்சவும். பின்னர் இறக்கி ஆறவிட்டு வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

இந்த தைலம் முடக்குவாதம்,பக்கவாதம்,கை,கால்வலி, மூட்டுவலியை முற்றுமாக குணப்படுத்தும். முடக்குவாதத்தை முற்றுமாக குணப்படுத்தும் வல்லமை கொண்டது.
எருக்கு வாததைலம்

சிறுகண்பீளை Aerva lanata -மருத்துவ குணங்கள்

சிறுகண்பீளை(சிறுபீளை)


 இது சிறு செடிவகையை சார்ந்தது  ஈரப்பாங்கான இடங்களில்

 பரவலாக வளர்கிறது.இதன் இலைகள் சிறியதாக நீள் வட்டவடிவில்

 இருக்கும்ஒவ்வொரு இலைக்கும் இடையில் பூக்கள் இருக்கும் பூக்கள்
 தண்டுடன் ஒட்டி அவல் போன்ற வடிவமாக இருக்கும்.
 இதன் எல்லாபாகமும்மருத்துவதற்குப் பயன்படுத்தப் படுகிறது

 மருத்துவ குணங்கள்-இது சிறு நீரைப் பெருக்கி   சிறுநீரகற்களை கரைக்கும்  வல்லமை உடையது.


*சிறு கண் பீளை இலையை இடித்து சாறு எடுத்து பதினைந்து மி.லி.வீதம்  மூன்று வேளை அருந்தி வரநீர் எரிச்சல், நீரடைப்பு குணமாகும்.


*கருத்தரித்த பெண்களுக்கு ஏற்படும் தளர்ச்சியை நீக்கி உடலுக்கு வன்மை  கொடுக்க இதன் வேரைக் கொண்டு செய்யப்படும் கஞ்சி நல்லது.


*சிறுகண் பீளை வேர்ப்பட்டையையும், பனைவெல்லத்தையும் சம அளவாக

 எடுத்து நன்கு அரைத்து இருநூறு மி.லி.பசும் பாலுடன் கலந்து  தினந்தோறும்

 இரண்டு வேளை அருந்தி வந்தால்நீரடைப்பு, கல்லடைப்பு, முதலிய

 நோய்கள்குணமாகும்.


   
 *இதன் வேரைத்தட்டி சிறிய மண்பானையில் இட்டு சிறிதளவு நீர்

  விட்டு  சுண்டகாய்ச்சி வடிகட்டி வேளைக்கு

    1.5 
அவுன்ஸ் அளவு தினம் 2 -3 வேளை உட்கொள்ள


  நீர்கட்டுகல்லடைப்புசதையடைப்பு போம் .

  

11.10.14

நெல்லிமுள்ளி ரசம்


நெல்லிமுள்ளி(காய்ந்தநெல்லி தோல்)
நெல்லிமுள்ளி

தேவையான பொருள்கள்:
நெல்லிமுள்ளி = 1 கப்
மிளகாய் வற்றல்(காய்ந்தமிளகாய்) = 2
மிளகு= அரை ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
பூண்டு = 4 பல்
இஞ்சி = புளியங்கொட்டை அளவு
பெருங்காயம் = சிறிது
தனியா( கொத்தமல்லி)= 1 ஸ்பூன்
புளி = சிறிதளவு
கடுகு = அரை ஸ்பூன்
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
நெல்லிமுள்ளியை முதல் நாளே 2 கப் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் அந்த தண்ணீரை வடிகட்டி அதில் புளியைக் கரைத்துக் கொள்ள வேண்டும்.
மிக்ஸியில் பெருங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகு, மிளகாய் வற்றல், தனியா, சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்துச் சேர்க்கவும்.
உப்பு தேவையான அளவு சேர்த்து 4 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் கொதிக்க விடவும். கொதித்து வரும் போது தேவையான அளவு எண்ணெய் எடுத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
சுவையான நெல்லிமுள்ளி ரசம் தயார். நெல்லிக்காய் மிகவும் குளிர்ச்சியைக் கொடுக்கும். 
மருத்துவ குணங்கள்:
நெல்லியில் வைட்டமின் C மற்றும் வைட்டமின் B ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. வயிற்றுப்போக்கு, நீரிழிவு போன்றவற்றைக் குறைக்கும்.
பித்தத்தை குறைக்கும். கண் பார்வையை தெளிவாக்கும். இரத்தத்தை

தூய்மையாக்கும். மூலம், மலச்சிக்கல், வாய்வு, இருமல், சளி, வாந்தி, மஞ்சள்

காமாலை மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும்


5.10.14

வெள்ளறுகு enicostema axillare -மருத்துவ குணங்கள்





வெள்ளறுகு

வெள்ளறுகு
வெள்ளறுகு



வெளிறியஇலைகளை மாற்றடுக்கில் கொண்ட வெண்மையான பூக்களைக் கொண்ட சிறு செடி.இது சுமார் 5 – 30 செ.மீ.உயரம் வளரக்கூட்டயது. இதன் இலைகள்  15 செ.மீ.நீளத்திலும், 5 செ.மீ.அகலத்திலும் இருக்கும்.இதன் இலைகள் சாம்பல் நிறமாக தும்பை இலை போல் வளைந்து சுருண்டு இருக்கும் .பூக்கள் பால் வெள்ளை நிறமாக இருக்கும். கணுக்களில் பூக்கள் கதிர் போல் பூக்ககும்.இதன் தண்டுகள் சாம்பல் பூசினால் போல் இருக்கும்.

மருத்துவப் பயன்கள் –: வெள்ளறுகானது மலத்தை இளக்கி, வெப்பத்தை அகற்றி,பசியைத் தூண்டி, உடலை உரமாக்கும்  .இது காச்சல், வாதம்,தோல்வியாதி, வயிற்று உப்புசம், பாம்புக்கடி, அஜீரணம், மற்றம் தொழுநோய் ஆகிய நோய்களைக் குணப்படுத்த வல்லது. இதில் இரும்பு சத்து, பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெகனீசியம், சிலிக்கா,பாஸ்பேட். குளோரைடு, சல்பேட் மற்றும் கார்பனேட் உள்ளது.

வெள்ளறுகை அரைத்து கால் ஆணிகட்டின் மீது வைத்து பத்துபோல்
கட்டிவர குணமடையும்.

வெள்ளறுகு செடியை வேருடன் எடுத்து சுத்தமாகக்கழுவி இடித்து சாறு பிழிந்து 20 மி.லி.. முதல் 30 மி,லி. வரை பாம்பு கடித்திருப்பவர்களுக்கு உள்ளே கொடுத்துவர வாந்தி பேதியாகிநச்சு இறங்கும். அல்லது  கடிவாயில் செடியின் சக்கையை அரைத்து வைத்துக்கட்டநச்சு முறியும்.

வெள்ளறுகு செடியை தேவையான அளவு எடுத்து வெந்நீர் விட்டு அரைத்துகாலையில் சொறி,  தவளைச்சொறி சிரங்கு, மேகத்தடிப்பு உள்ளவர்கள் பூசி, ஒரு மணி நேரம் சென்ற பின்னர் பேய்பீர்க்கங்காய் கூட்டால் உடலைத் தேய்த்துக் குளித்து வந்தால் அவை குணமாகும்.





பீர்க்கங்காய் 


வெள்ளறுகு செடியை எடுத்து சுத்தம் செய்து நன்றாக இடித்து அதனுடன் பத்து மிளகு, ஒரு துண்டு சுக்கு, நான்கு சிட்டிகை சீரகம் ஆகியவைகளைத் தட்டி மண் சட்டியில் போட்டு, எண்ணூறு மி.லி. நீர்விட்டு அதனை இருநூறு மி.லி.யாக வற்றும் வரை நன்கு காச்சி வடிகட்டி காலை, மாலை இரண்டு வேளை நூறு மி.லி வீதம் அருந்தி வர கீள்வாதம், நரம்புக் கோளாறுகள் முதலியவை கட்டுப்படும். வெள்ளறுகுவை அரைத்து சிறு சிரங்குகளுக்கும் பூசி வரலாம்.


தேவையான வெள்ளறுகை வெண்மிளகுடன்சேர்த்து அரைத்து நீரில் கலந்து வடிகட்டி கொஞ்சம் பசுவின் வெண்ணெய் சேர்த்து அருந்தி வரஉடல் சூடு தணியும்.  

2.9.14

முசுமுசுக்கை mukia maderaspatana பயன்கள்,இளநரை போக்கும் முசுமுசுக்கை தைலம்

முசுமுசுக்கை




முசுமுசுக்கை

http://settikathir.blogspot.com/முசுமுசுக்கை







கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை , சுவர்களிலும், தரைகளிலும் தானாக வளர்ந்திருக்கும். 

இது நுரையீரல் நோய்கள், சுவாசக் கோளாறுகளை நீக்க வல்லது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. 

மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது. 

அமைதியின்மை போக்கும் இக்கீரையை நன்றாக ஆய்ந்து புழுங்கல் அரிசியுடன் சேர்த்து மாவாக அரைத்து தோசை, அப்பம் சுட்டு சாப்பிடலாம். 

இதனை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொள்ள நாள்பட்ட நோய்களால் தளர்ந்து போன உடல் பலமடையும், மனதில் அமைதியின்மை, கோபம் ஆகியவற்றையும் சரி செய்யக்கூடியது இந்த முசுமுசுக்கை கீரை. உயர் ரத்த அழுத்த நோயினை இது குணப்படுத்த வல்லது.

சளி, இருமல் வரட்டு இருமல், இழுப்பு வலிகள் போன்றவற்றையும் ஒழித்துக் கட்டும். ஆஸ்துமா குணமாகும் முசுமுசுக்கையை சூரணமாக செய்து உட்கொள்ள நாள்பட்ட எலுப்புருக்கி, ஆஸ்துமா, காசநோய், இளைப்பு நோய், ரத்தசுவாசநோய் போன்றவை குணமடையும். 

முசுமுசுக்கை தைலம்
முசுமுசுக்கை இலை  எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு  அந்த எண்ணெயைத் தலைக்குத்தேய்த்து வந்தால் இளநரை மாறும்.ஆஸ்துமாகாசநோய்இளைப்பு நோய்ரத்தசுவாசநோய் போன்றவை குணமடையும்.