21.3.14

சூரிய நமஸ்காரம்

சூரிய நமஸ்காரத்தின்  நிலைகள்

சூரிய நமஸ்காரம்:
  • சூரிய நமஸ்காரம் என்பது தினந்தோறும் அதிகாலையில் சூரியன் தோன்றும் முன்பே எழுந்து, காலைக்கடன்களை முடித்து, துவாலையினால் உடலை நன்கு துடைத்துக் கொண்டு, உலர்ந்த ஆடை அணிந்து கொண்டு சூரியன் உதயமாகும் நேரத்தில் சூரியனை வழிபடுவதாகும்.
சூரிய நமஸ்காரத்தின் நன்மைகள்:
  • கண் மிகவும் உணர்ச்சி மிகுந்தது.சூரிய ஒளி கண்ணுக்கு இதத்தை அளித்து ஒளியூட்டும்.
  • சூரிய நமஸ்காரத்தால் நோய்கள் அணுகாது.உடல் வலிமையும், அழகும், மினுமினுப்பும் பெறும்.
  • நீண்ட ஆயுள் பெறும்.கண்ணொளி மங்காது.
  • கண்பார்வை குறைந்தவர்கள் இப்பயிற்சியை தொடர்ந்து செய்தால் முழுப்பார்வை பெறுவார்கள்.
சூரிய நமஸ்காரத்தின் பத்து நிலைகள்:
முதல் நிலை:
  • இரண்டு கால்களையும், முழங்கால்களையும் சேர்த்துக்கொண்டு கிழக்கு நோக்கி நிமிர்ந்து நிற்க வேண்டும்.
  • கடவுளை வணங்கும் நிலையில் கைகளை இறுக்கமாக சேர்த்து வைக்க வேண்டும்.
  • பெருவிரலை மட்டும் மார்போடு அழுத்தி வைக்க வேண்டும்.
  • மார்பை முன்புறம் அழுத்திக் கொண்டு வயிற்றுப் பகுதியை உள்ளிழுத்துக் கொள்ள வேண்டும்.
  • உடலை விறைப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • வாயை நன்கு மூடிக்கொண்டு மூக்கினால் மட்டுமே காற்றை நன்கு உள்ளிழுத்துக்கொள்ள வேண்டும்.
இரண்டாம் நிலை:
  • மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே முன்புறம் நன்றாகக் குனிய வேண்டும்.
  • முன்புறம் குனியும்போது முழங்கால்கள் மடங்கக்கூடாது.
  • உள்ளங்கைகளைத் தரையில் நன்கு பதிக்க வேண்டும்.
  • அதில் ‌பெருவிரலை மட்டும் தனியே வைத்துக் கொண்டு மற்ற விரல்களை சேர்த்து வைக்க வேண்டும்.
  • மூக்கு அல்லது நெற்றி முழங்காலைத் தொடுவது நல்லது.
  • ஆயுள் அதிகரிப்பதாக நினைத்துக்கொண்டு மூக்கின் வழியே மூச்சை நன்கு வெளிவிட வேண்டும்.
மூன்றாம் நிலை:
  • மூச்சை நன்கு வெளிவிட்ட பின் மீண்டும் காற்றை உள்ளிழுக்க வேண்டும்.
  • கைகளை எடுக்காமல் இடது காலை மடக்கிக்கொண்டு வலது காலை பின்னோக்கி நீட்டவேண்டும்.
  • மடக்கிய கால்களை இரு கைகளுக்கும் இடையே சற்று முன்னோக்கி இருக்கவேண்டும்.
  • நீட்டிய காலின் முழங்காலும், விரல்களும் தரையில்தொட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
  • கைகள் செங்குத்தாக இருக்க வேண்டும்.அதன்பின் தலையை முடிந்த அளவு பின்னோக்கி வளைத்து நிமிர்ந்து பார்க்க வேண்டும்.
  • மூச்சை உள்ளே இழுத்துக்கொள்ள வேண்டும்.
நான்காம் நிலை:
  • மூச்சை உள் இழுத்துக்கொண்டே மற்றொரு காலையும் பின்னோக்கி நீட்ட வேண்டும்.
  • பெருவிரல்கள், கணுக்கால்கள், முழங்கால்கள் ஆகியவை ஒன்றையொன்று நெருங்கி இருக்க வேண்டும்.
  • கைகள் செங்குத்தாகவே இருக்க வேண்டும். இடுப்பு, முதுகு, தலையின் பின்புறம் ஆகியவை ஏறத்தாழ ஒரே நேர்க்கோட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வாேண்டும்.
  • உடல் பாரம் முழுவதுமே உள்ளங்கையிலும், கால்விரல்களிலுமே தாங்க வேண்டும்.
  • கால்கள் நேராகவும், விறைப்பாகவும் இருக்க வேண்டும்.
  • இதனை செய்யும்போது மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே செய்ய வேண்டும்.
ஐந்தாம் நிலை:
  • அதன்பின் முழங்கால்களைப் பூமியில் பொருந்தும்படி செய்ய வேண்டும்.
  • அதற்கேற்ப முழங்கைகளை மடக்க வேண்டும். ஆனால் கைகளோ, கால்விரல்களோ இருந்த இடத்தை விட்டு நகரக்கூடாது.
  • முகவாயை மார்பின் மேற்புறத்தில்  அழுத்த வேண்டும். மார்பின் கீழ்புறமும், நெற்றியும் பூமியில் தொடும்படி செய்ய வேண்டும். வயிற்றை சற்று உள்ளிழுத்துக்கொள்ள வேண்டும்.
  • வயிற்றுப் பகுதியை தரையில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • பின்பு இடுப்பை  எவ்வளவு உயரம் தூக்க முடியுமோ அவ்வளவு உயரம் தூக்க வேண்டும்.அதன்பின் உள்ளிழுக்கப்பட்ட மூச்சை வெளிவிட வேண்டும்.
ஆறாம் நிலை:
  • ஐந்தாம் நிலையில் உள்ளபடியே உடலை வைத்துக்கொண்டு கைகளை விறைப்பாக நீட்ட வேண்டும்.
  • உடல் மேலாக செல்லும் போது மெதுவாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.
  • மார்பை முன்னோக்கி அழுத்தி, முதுகைப் பின்புறமாக வளைக்க வேண்டும்.
  • தலையை மேல்நோக்கி வைத்துக்கொண்டு மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.
ஏழாம் நிலை:
  • மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு நான்காவது நிலைக்கு வர வேண்டும்.
  • கைகளை வளைக்காமல் சாய்வாக நின்றுகொண்டு உடலை பின்னோக்கி வளைக்க வேண்டும்.
  • தலையை முன்புறம் நன்றாக வளைக்க வேண்டும்.
  • உள்ளங்கால்களை பூமியில் பதியும்படி வைக்க வேண்டும்.
  • கால்கள் நேராக இருக்க வேண்டும். இதனை செய்யும் போது மூச்சை வெளிவிடக்கூடாது.
எட்டாம் நிலை:
  • மூச்சை வெளிவிடாமல் இடதுகாலை முன்புறம் கொண்டு வர வேண்டும்.
  • அப்போது கைகளை செங்குத்தாக வைக்க வேண்டும்.
  • மூன்றாவது நிலையில் இரண்டு கைகளுக்கும் இடையில் முழங்கால் முன்னோக்கி இருப்பதுபோல் எட்டாம் நிலையில் வைக்க வேண்டும்.
  • கால்விரல்கள் எவ்வளவுக்கு எவ்வளவு முன்னுக்கு வருகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.
  • வலதுகாலின் முழங்காலும், கால் விரல்களும் பூமியில் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
  • இப்போது மூன்றாம் நிலையை அடைய வேண்டும்.
ஒன்பதாம் நிலை:
  • மூச்சை அடக்கிக்கொண்டே இரண்டாவது நிலையை மீண்டும் அடைய வேண்டும்.
  • மூச்சை மூக்கின் வழி‌யே முழுவதும் வெளி‌ே‌யற்ற வேண்டும்.
பத்தாம் நிலை:
  • மூக்கினால் முழு மூச்சையும் உள்ளிழுத்து முழங்காலை மடக்காமல் முதல் நிலையை அடைய வேண்டும்.

No comments:

Post a Comment