17.3.14

பச்சைப்பயறு முளைதானியப் பால்


தேவையான பொருட்கள்:
  1. முளைக்கட்டிய பச்சைப்பயறு.
  2. தேன்.
  3. பால்.
செய்முறை:
  • பச்சைப்பயிற்றை ஒரு நாள் தண்ணீரில் ஊற வைக்கவேண்டும்.
  • பின் துணியில் சுற்றி வைத்தால் முளை விட்டிருக்கும்.
  • பின்பு முளை விட்ட பச்சைப்பயிற்றை மிக்ஸியில் தண்ணீர் விட்டு நன்கு அரைக்க வேண்டும்.
  • இதனுடன் தேன், பால் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
  • இப்பொழுது சுவையான பச்சைப்பயறு முளைதானியப் பால் தயார். இதை உணவாகப் பருகலாம்.
மருத்துவக் குணங்கள்:
  • முளைத்த பச்சைப்பயறு சாறு ஒருவாரம் சாப்பிட்டு வந்தால் குடல் புண், வயிற்றுப் புண் குறையும்.
  • உடல் தொப்பை, பருமன், நீரழிவுப் பிணிகள், கண் எரிச்சல் ஆகிய நோய்கள் குறையும்.
  • உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

No comments:

Post a Comment