21.2.14

ஜாதிக்காயின் மருத்துவ குணங்கள்


ஜாதிக்காய்
ஜாதிக்காய்

ஜாதிக்காய்



 ஜாதிக்காய் என்பதற்கு குலக்காய்,  அட்டம், அட்டிகம் என்கின்ற வேறு பெயர்கள் 

இருக்கின்றன. சாதிக்காய்க்கு தாவரவியல் வழங்கும் பெயர் மைரிஸ்டிகா அஃபியனாலிஸ் அல்லது மைரிஸ்டிகா ஃப்ராக்ரன்ஸ் எனப்படும். இது ஒரு மர இனத்தை சேர்ந்தது. சாதிக்காய் பழத்தில் கொட்டையின் ஓட்டினுள்ளே இருக்கும் பருப்புதான் சாதிக்காய் என்று உபயோகிக்கப்படுகிறது. இதனை உணவு தயாரிப்பில் மணமூட்டும் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர். இதன் சுவை : துவர்ப்பு, தன்மை : வெப்பம்.

 மருத்துவ குணங்கள் 

*ஜாதிக்காய் பல்வேறு மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது. இது ஜீரணத்திற்கு மிக சிறந்த மருந்தாகும்.

*முகத்தை அழகாக்கும்: ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் பருக்கள் நாளடைவில் 
மறையும், முகம் பொலிவடையும். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

*அம்மை கொப்புளங்கள் சரியாகும்: அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு 
வந்தால் அம்மைக் கொப்புளங்கள் மறையும். ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.


*தசைப்பிடிப்பை நீக்கும்: ஜாதிக்காயின் விதை வாந்தியை தடுக்கக் கூடியது. ஜீரணத்தை சக்தியை அதிகரிக்கும். தசை வலியினைப் போக்குகிறது. விதையில் 
இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டுவலி, பக்கவாதம் ஆகியவற்றிற்கு பயன்படுகிறது.

* கொலராநோயின் பொழுது ஏற்படும் தசைப்பிடிப்பினை போக்க மேல் பூச்சாக உதவுகிறது. இதனுடைய வடிநீர் காலரா நோயாளிகளின் தண்ணீர் தாகத்தினைச் சரிப்படுத்தும். ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும்.

*ஜாதிக்காயின் விதைகளின் மேல் சூழ்ந்துள்ள சிவப்பு நிற திசு ஜாதிபத்ரி எனப்படுகிறது. ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்ரி வயிற்றுப் போக்கு, உப்புசம், குடல்வலி, 
ஆகியவற்றினை போக்க உதவுகிறது.

*பிறந்த குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படாமல் இருக்க ஜாதிக்காய் விதையை அரைத்து குடிக்க கொடுப்பார்கள். ஜாதிக்காய், சுக்கு மற்றும் ஓமம் மூன்றின் பொடி ஜீரணத்திற்கு சிறந்த மருந்தாகும்

*ஜாதிக்காய் உடலை வலிமையாக்கும்.


* ஜாதிக்காய் எண்ணெய்(தைலம்), பல்வலி, வாத நோய் ஆகியவைகளுக்கு வெளி உபயோகத்திற்கு பயன்படுகிறது.


*ஹோமியோபதி எனும் ஜெர்மனி மருத்துவத்தில் ஜாதிக்காயிலிருந்து வீரியப்படுத்தி (பொடன்சி) தயாரிக்கப்பட்ட மருந்தின் பெயர் நக்ஸ்மாஸ்சாடா எனப்படும் இம்மருந்து சில மன நோய்க்குறிகளுக்கும் சில நோய்களை குணப்படுத்த பயன்பட்டு வருகிறது.


மனக்குறிகள் : தோல்வியான சம்பவங்களாலும் அல்லது வேறு காரணங்களாலும் அதிக மன வேதனையால் மன நிலை பாதிப்பு (லிபோதைமியா).


நினைவாற்றல் குறைப்பாட்டிற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.


1. புரதம், மாவு சர்க்கரைப் பொருள் அடங்கிய க்ளைகோ ப்ரோட்டீன் என்னும் சத்துப்பொருள் மூளையில் குறைந்து இருப்பது. அதாவது, இந்தச் சத்துப் பொருள் மூளையின் வெளிப்பகுதியில் (செரிப்ரல் கார்டெக்ஸ்), நரம்பு செல்களிலும் (நியூரான்), நரம்புகளிலும் நினைவுகளை அனுப்புவதில் ஊக்கமுடன் செயல்படச் செய்கிறது.


2. மூளையில் (தலைமிதழ்), ஒரு நரம்பிலிருந்து மற்றொரு நரம்பிற்கு (ஆக்ஸான், டென்ட்ரான்) தகவல்கள் கடந்து செல்லும்போது (டிரான்ஸ்மிஷன்), இரண்டு நரம்புகளும் இணையும் இடத்தில் (சைனாப்ஸ்) நினைவுகளின் உணர்ச்சி வேகம் (இம்பல்ஸ்) தாமதமாக செயல்படுவதால் ஞாபகம் உடனே வருவதில்லை.


விபத்தினாலும் அல்லது சில மருந்து வகைகள் சாப்பிட்டதாலும், கண்களில் கருவிழிக்கு (ஐரிஸ்) நடுவில் இருக்கும் கண்மணி (பியூபில்) என்னும் உறுப்பு, அதிக அளவில் விரிந்திருக்கும் கண் நோய், கண்மணியில் செயல்படும் தசைகள் (ஸ்பிங்டர் மஸில்) பாதிப்பினால் ஏற்படுகிறது. 


மேற்கண்ட இரண்டு பாதிப்புகளுக்கும் (ஞாபக மறதி, கண் நோய்) நக்ஸ்மாஸ்சாடா என்னும் மருந்து செயல்படுகிறது.


No comments:

Post a Comment